From Wikipedia, the free encyclopedia
தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் அல்லது தமிழ் சீரியல் (Tamil television soap opera) என்பது தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களால் தயாரிக்கப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் ஆகும். பெரும்பாலான தொடர்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களால் அதிகம் பார்க்கப்படுகின்றன. பெரும்பாலான தமிழ் மொழித் தொடர்கள் குடும்ப சார்ந்த கதைக்களத்துடன் தயாரித்து ஒளிபரப்பு செய்து வருகின்றது. அதே தருணம் நகைச்சுவை, காதல், திகில், பரபரப்பூட்டும், மர்மம், வரலாறு போன்ற வகைகளிலும் தயாரிக்கப்படுகிறது.[1]
தமிழ் மொழியில் முதல் முதலில் 1980-ஆம் ஆண்டுகளில் தொடர்கள் தயாரிக்கப்பட்டு தூர்தர்ஷன் என்ற அலைவரிசையில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து 1990-ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான தொடர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஒளிபரப்பானது. தற்பொழுது சன் தொலைக்காட்சி,[2] விஜய் தொலைக்காட்சி,[3] ஜீ தமிழ்,[4] கலர்ஸ் தமிழ்,[5] ஜெயா தொலைக்காட்சி, சன் லைப், வசந்தம் தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி, சக்தி தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி,[6] பொதிகை தொலைக்காட்சி போன்ற பல தொலைக்காட்சிகள் தமிழில் இயக்குகின்றன.
தமிழ் தொலைக்காட்சியில் வள்ளி என்ற தொடர் அதிக அத்தியாயங்களில் ஒளிபரப்பான முதல் தொடர் ஆகும். இந்த தொடர் திசம்பர் 7, 2012-ஆம் ஆண்டு முதல் 14 செப்டம்பர் 2019 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 1961 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[7][8]
தமிழ்நாட்டில் 1980களில் இருந்து தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்ப ஆரம்பமானது. தமிழ் தொடர்கள் முதலில் மேடை நாடகங்களை எடுத்து 1980–1990 வரை காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூர்தர்ஷன் என்ற அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 1986-ஆம் ஆண்டில் ஏவிஎம் மற்றும் கவிதாலயா போன்ற தயாரிப்பு நிறுவனங்களால் குடும்ப சார்ந்த கதைக்களத்துடன் குறுந்தொடர்கள் தயாரித்து ஒளிபரப்பப்பட்டன.
தற்காலத்தில் உலகம் முழுவதும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டு பகல் நேரத்தொடர்கள் (11:00-15:00), மாலை நேரத்தொடர்கள் (18:00-19:59) மற்றும் இரவுத்நேர தொடர்கள் (பிரதான நேரம்) (20:00-23:00)[9] என்ற பிரிவில் ஒளிபரப்பாகி வருகின்றது. இன்று பல அலைவரிசைகள் நாடகத் தொடர்களை ஒளிபரப்பும் போது இலக்கு அளவீட்டுப் புள்ளியை அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன.
தமிழ் தொடர்கள் முதலில் மேடை நாடகங்களை எடுத்து 1980–1990 வரை காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூர்தர்ஷன் என்ற அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டில் ஏவிஎம் தயாரிப்பில் 'ஒரு மனிதனின் கதை',[10] 'நேற்றைய மனிதர்கள்' (1988), நாணயம் (1991) மற்றும் பிரபல இயக்குனர் பாலச்சந்திரன்[11] என்பவர் 'மின் பிம்பங்கள்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இயக்கிய 'ரயில் சிநேகம்' (1989)[12] போன்ற சில தொடர்கள் தூர்தர்ஷன் என்ற அலைவரிசையில் ஒளிபரப்பானது.
1993 ஆம் ஆண்டில் கலாநிதி மாறனால்[13] சன் தொலைக்காட்சி[2][14][15] என்ற அலைவரிசையும் மற்றும் இந்திய அரசுத்துறையாள் பொதிகை தொலைக்காட்சி[16] என்ற அலைவரிசையும் 14 ஏப்ரல் 1993 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. அதை தொடர்ந்து 14 அக்டோபர் 1994 ஆம் ஆண்டு ராஜ் தொலைக்காட்சியும்[6] மற்றும் 24 நவம்பர் 1994 இல் 'கோல்டன் ஈகிள் கம்யூனிகேஷன்'[3] (தற்பொழுது விஜய் தொலைக்காட்சி)[17] போன்ற பொழுதுபோக்கு அலைவரிசைகள் ஆரம்பமானது. இந்த தொலைக்காட்சிகள் வருகைக்கு பிறகு நாகாவின் மர்மதேசம் (1995–1998),[18] பாலச்சந்திரனின் 'காதல் பகடை' (1996–1998)[19], ரமணி விஸ் ரமணி (1998), பிரேமி (1999)[20], காசளவு நேசம் (1999-2000)[21] மற்றும் ஏவிஎம்[22] இன் தயாரிப்பில் 'முத்துக்கள்' (1995), 'எனக்காகவா' (1995), 'நிம்மதி உங்கள் சாய்ஸ்' (1997), 'ஆட்சி இன்டெர்னஷனல்' (1998), 'ஒரு பெண்ணின் கதை' (1998) மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து மற்றும் நடித்த சித்தி (1999-2001)[23] போன்ற பல தொடர்கள் ஒளிபரப்பானது.
சிங்கப்பூர் நாட்டில் 1 செப்டம்பர் 1995 'பிரீமியர் 12' தற்பொழுது (வசந்தம் தொலைக்காட்சி (2008 முதல்)) என்ற பெயரில் முதல் தமிழ் அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மலேசியாவில் அஸ்ட்ரோ வானவில்[24] என்ற அலைவரிசை 1 ஜூன் 1996 ஆம் ஆண்டும் இலங்கையில் முதல் தமிழ் மொழி தொலைக்காட்சி சேவை 20 அக்டோபர் 1998 ஆம் ஆண்டில் மகாராஜா கூட்டு நிறுவனத்தால் சக்தி தொலைக்காட்சியும்[25] அதை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவால் ஜெயா தொலைக்காட்சி என்ற செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் ஆகஸ்ட் 22, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஆண்டுகளில் எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி பேட்டி சென்று அடைந்த காரணத்தால் தமிழ்த் தொலைக்காட்சி துறை மிகவும் பிரபலமானது. 2000 ஆண்டுகளில் மக்கள் தொலைக்காட்சி (2006) கலைஞர் தொலைக்காட்சி (2007), மெகா தொலைக்காட்சி (2007), ஜீ தமிழ்[28] (2008) மற்றும் வசந்த் தொலைக்காட்சி (2008) போன்ற பல பொழுதுபோக்கு அலைவரிசைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டில் குட்டி பத்மினியின் கிருஷ்ணதாசி (2000-2002),[29] கவியாஞ்சலி (2001–2002),[30] மெட்டி ஒலி (2002-2006),[31] கோலங்கள் (2003-2009)[32] கல்கி (2004-2007), காதலிக்க நேரமில்லை (2007-2008)[33] போன்ற பல நெடும் தொடர்கள் ஒளிபரப்பானது.
2010 ஆம் ஆண்டுகளில் நாதஸ்வரம் (2010-2015),[42] அழகி (2011-2016),[43], சரவணன் மீனாட்சி (2011-2013),[44] பொம்மலாட்டம் (2012-2016),[45] தெய்வமகள் (2013-2018),[46] கல்யாணம் முதல் காதல் வரை (2014-2017),[47] நந்தினி (2017-2018) போன்ற பல வெற்றி தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த காலப்பகுதியில் இலக்கு அளவீட்டுப் புள்ளி பரவலாக அறியப்பட்ட வார்த்தையாகும்.
2010 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பாலிமர் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி,[48] ஜீ தமிழ், ஜெயா தொலைக்காட்சி, கலர்ஸ் தமிழ், புதுயுகம் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் வேந்தர் தொலைக்காட்சி போன்ற பல அலைவரிசைகளில் இந்தி மொழி மாற்றுத் தொடர்கள் ஒளிபரப்பாகி நேரடி தமிழ்த் தொடருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.[49] அதை எதிர்த்து பல சின்னத்திரை நடிகர்கள் போராட்டம் மேட்கொண்டனர்.[50] அதன் விளைவாக 2015 ஆம் பின்பகுதியில் மொழிமாற்று தொடர்களின் ஆதிக்கம் சரிவடைந்து பல தரமான நேரடித் தமிழ் தொடர்கள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.
2017 ஆம் ஆண்டு காலத்திற்கு பிறகு ஒளிபரப்பாகும் பல தொடர்கள் தெலுங்கு, கன்னடம்[51], மராத்தி, வங்காளம்[52] மற்றும் ஹிந்தி தொடர்களின் மறு ஆக்கத் தொடர்கள் ஆகும். விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் போன்ற அலைவரிசைகள் தமது சகோதர அலைவரிசையியில் ஒளிபரப்பான வெற்றி தொடர்களை இலக்கு அளவீட்டுப் புள்ளியை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்கின்றன. அப்படி மறு ஆக்கம் செய்த தொடர்களான மௌன ராகம் (2017-2020), மெளன ராகம் 2 (2021-)செம்பருத்தி (2017-),[53] பூவே பூச்சூடவா (2017-2021), சிவா மனசுல சக்தி (2019-2020), பாரதி கண்ணம்மா (2019-),[54] பாக்கியலட்சுமி (2020-), சத்யா (2019-2021), சத்யா 2 (2021-),[55] கண்ணான கண்ணே (2020-)[56][57] மற்றும் திருமதி ஹிட்லர் (2020-)[58] போன்ற பல தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. ரோஜா[59][60] மற்றும் பாரதி கண்ணம்மா[61] போன்ற தொடர்கள் இலக்கு அளவீட்டுப் புள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[[
2020 ஆம் ஆண்டு கொரோனாவைரசு பெரும் தொற்று நோய் பரவல் காரணமாக தமிழ்த் தொலைக்காட்சித் துறை மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது.[73] இதன் விளைவாக ஏப்ரல் 3 முதல் எல்லா தொடர்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஒளிபரப்பானது. அதே தருணம் மின்னலே, தமிழ்ச்செல்வி, அழகு,[74] ராசாத்தி அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர்-1 மற்றும் நாயகி-1 போன்ற பல தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் நாட்டில் 1 செப்டம்பர் 1995 ஆம் ஆண்டு முதல் 'பிரீமியர் 12' என்ற பெயரில் தமிழ் மொழி அலைவரிசை சேவை ஆரம்பிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதல் வசந்தம் தொலைக்காட்சி[75] என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரபபாகி வருகின்றது. இந்த அலைவரிசையில் வேட்டை 1 (2010), நியங்கள் (2011), நீயா (2015), கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (2018), ரௌத்ரம் (2019), சிங்கா ஏர்லைன்ஸ் (2019),[76][77] அறிவான் (2019-2020), தில்லானா (2019-2020), யார்? (பருவம் 3) (2020), ரோமியோ அண்ட் ஜூலியட் (2020), கவசம் (2020)[78] போன்ற பல வித்தியாசமான கதைக்கரு கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகி 'ஆசிய தொலைக்காட்சி விருது'களும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு தயாரிக்கப்படும் தொடர்களில் தென் கொரியா மற்றும் சீனா தொடர்களின் தாக்கம் அதிகமக உள்ளது. இந்த தொடர்கள் கிழமையில் 4 நாட்கள் ஒளிபரப்புகிறது, தொடர்களின் அத்தியாயங்கள் 30 முதல் 60 வரை, 1 முதல் 5 பருவங்கள் எடுக்கப்படுகிறது. இவர்களின் தொடர் நவீன காலத்திற்கு ஏட்ப பிரமாண்டமாக மற்றும் கதை அம்சங்கள் இளைஞர்களை கவரும் வகையில் காதல், மருத்துவம், கற்பனை, விடலைப் பருவம், திகில், மர்மம், நகைச்சுவை நாடகம், பரபரப்பூட்டும், அதிரடி போன்ற பல வகைகளுடன் பாடல் காட்சிகள் என பல சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகிறது.
இந்த நாட்டு சின்னத்திரை நட்சத்திரங்களை கௌரவிக்கும் விதமாக வருடத்திற்கு ஒரு முறை 'பிரதான விழா'[79][80] என்று பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் தமிழ்த் தொடர்கள் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சியான பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. உயிரே,[80][81] அறிவான் மற்றும் வேட்டை போன்ற தொடர்கள் ஜீ5 என்ற ஓடிடி தளத்திலும் வெளியானது.[82]
மலேசியா நாட்டில் த. ஆனந்தகிருஷ்ணன் என்பவரால் 1 ஜூன் 1996 ஆம் ஆண்டு அஸ்ட்ரோ வானவில் என்ற முதல் தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டது.[24] அதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு 'ஆஸ்ட்ரோ வின்மீன்' என்ற தொலைக்காட்சி ஆரம்பமானது.[83][84] இந்த தொலைக்காட்சியில் களவாணி கண்டுபிடி (2020), கல்யாணம் 2 காதால் (2020), யார் அவன் (2020), ராமானுஜன் (2020), சீரியல் பேய் (2021)[85] போன்ற பல குறும் தொடர்கள் ஒளிபரப்பானது.
அதிகமக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சி தொடர்களில் சன் தொலைக்காட்சிக்கு முதல் இடம். அடுத்தபடியாக விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சி, புதுயுகம் தொலைக்காட்சி தொடர்கள் உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் குடும்ப கதைகள்தான். ஆரம்பகாலத்தில் வாரநாட்களில் தொடர்களை ஒளிபரப்பாகி வந்ததது, 2000ஆம் ஆண்டு கால பகுதியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகியது, 2015ஆம் ஆண்டுக்கு பிறகு சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் போன்ற அலைவரிசைகள் திங்கள் முதல் சனிக்கிழமை தொடர்கள் ஒளிபரப்பாக்கி வருகின்றது.
இலங்கையில் சக்தி தொலைக்காட்சி, நேத்திரா டிவி, வசந்தம் தொலைக்காட்சி போன்ற பல தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருந்தாலும் அதிகளவான மக்கள் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி தொடர்களையே அதிகமாக பார்க்கின்றனர், தமிழ் நாட்டு தொடர்கள் தமிழர்கள் மற்றும் இன்றி சிங்களவர்களாலும் பார்க்கப்படுகின்றது. இலங்கையில் தமிழ் தொடர்கள் தயாரிப்பது மிகவும் அரிது, இன்றளவும் தமிழ்நாட்டு தொலைக்காட்சி தொடர்களை வாங்கி இலங்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் செய்து வரும் வழக்கம் உண்டு. 2014ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் சின்னத்திரை என்ற தலைப்பில் மாதம் ஒரு தொடர் என்ற விகிதத்தில் ஒளிபரப்பு செய்து வந்தது. இலங்கை தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்களை தயாரிப்பதைவிட பல தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகின்றது.
2019 ஆம் ஆண்டு கால பிற்பகுதியில் 7கே,[86] அமாயா,[87] ருத்ராக்ஷரா,[88] போன்ற சில தரமான தொடர்கள் சக்தி தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது.
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தீபம் தொலைக்காட்சியில் இலங்கை தமிழர்களால் முதல் முதலில் தயாரிக்கப்பட்ட நெடும்தொடர் சித்திரா, இந்த தொடர் ஐரோப்பா நாடுகளில் உள்ள தமிழர்களால் அதிகளவாக பார்க்கப்பட்டது. இந்த தொடர் இலங்கை தொலைக்காட்சியான நேத்திரா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்[89][90] என்ற தொலைக்காட்சி வருகைக்கு பிறகு ராதிகாவின் ராடான் மீடியாவொர்க்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைத்து தயாரித்த தொடர் யாழினி,[91] இந்த தொடர் இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் முதல் நெடும் தொடர் ஆகும். இந்த தொடர் இலங்கை தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சிலும் ஒளிபரப்பானது. இதையடுத்து இலங்கை யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நெடும் தொடர் 'மர்மக்குழல்' என்ற தொடர் ஆகும். இந்த தொடரில் முற்றிலும் இலங்கைத் தமிழர்களே நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான தமிழ்த் தொடர்களின் கதைகள் குடும்பம், நகைச்சுவை, மர்மம் போன்றவற்றை மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டது. பிரபல புதின எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜானின் நாவல்களை மையமாக வைத்து 'இயந்திர மனிதன்', மர்மதேசம், கிருஷ்ணதாசி, 'விடாது கருப்பு', 'சிவமயம்' போன்ற பல தொடர்கள் உருவாக்கப்பட்டது.
தற்காலத்தில் தமிழ் தொடர்களின் கதைகள் சந்தர்ப்பத்திற்கு ஏட்ப மாற்றப்படும் வழக்கம் உண்டு. ஒரு தொடர் உருவாகும் பொது முழு கதையையும் எழுதிய பிறகு எடுப்பதில்லை, காரணம் இலக்கு அளவீட்டுப் புள்ளியை அதிகமாகப் பெறுவதற்குகாக கதைகள் மாற்றப்படும். தமிழ்த் தொடர்கள் பெரும்பாலும் கூட்டு குடும்ப கதை, கணவன் மனைவி அல்லது மாமியார் மருமகள் கதையை மையமாக வைத்துதான் எடுக்கப்படுகின்றது.
தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேட்பை பெற்ற கதைகளில் மர்மத் தொடர்களும் அடங்கும். 1995ஆம் காலகட்டத்தில் ஒளிபரப்பான நாகாவின் மர்மதேசம், 'விடாது கருப்பு' போன்ற தொடர்கள் இன்றளவும் மக்களால் அறியப்படுகிறது. இந்த தொடர்கள் தற்பொழுது சிடி வடிவில் விற்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் தொலைக்காட்சியில்[92] ஒளிபரப்பான 'காதலிக்க நேரமில்லை' (2007-2008) என்ற தொடர் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் ஆகும். இந்த தொடரின் முகப்பு பாடல் இணையத்தில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.[93] அதை தொடர்ந்து இது ஒரு காதல் கதை, அன்பே வா (2009-2010), ஆஹா (2012), போன்ற பல தொடர்கள் ஒளிபரப்பானது.
பெரும்பாலும் நகைச்சுவைத் தொடர்கள் வாரநாட்களில்தான் ஒளிபரப்பாகி வந்தந்து. முதல் முதலில் 2010ஆம் ஆண்டு காலத்தில் கிழமை நாட்களில் தொடர்கள் ஒளிபரப்ப தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேட்பும் பெற்றது.
பக்தி தொடருக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர்கள் உண்டு. பெருமாளுமான பக்தி தொடர்கள் அம்மன், முருகன் அல்லது நாகம் பற்றியே கதை அமைந்து இருக்கும். சரிகம நிறுவனம் தயாரித்த வேலன், ராஜ ராஜேஸ்வரி மற்றும் திரிசூலம், வேப்பிலைகாரி போன்ற தொடர்கள் 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் மிகவும் பிரபலம்.
எல்லா அலைவரிசையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பெரும்பாலும் பழி வாங்கும் கதை அம்சங்களில் தான் ஒளிபரப்பாகிறது. இந்த தொடர்கள் திகில் கதை அம்சத்தில் அல்லது குடும்பக்கதை அம்சத்திலும் இருக்கலாம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆதிரா, கங்கா, நந்தினி ஒளிபரப்பாகும் அழகு, நாயகி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல தொடர்கள் இதற்குல் அடங்கும்.
தமிழ் தொலைக்காட்சியில் வரலாற்று தொடர்கள் தயாரித்து ஒளிபரப்பு செய்வது மிகவும் குறைவு, மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வாய்த்த எடுத்த சந்தனக்காடு, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமானுஜர், வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அண்ணாமலை போன்ற சில தொடர்களை குறிப்பிடலாம்.
தொன்மவியல் கதைகள் என்பது நாம் அறிந்த கதைகளை பற்றி அல்லது முன்பு நடத்த விடயங்களை பற்றி எடுக்க பட்ட தொடர்கள். உதாரணம்: கடவுள் களின் வாழ்க்கை வரலாறு பற்றிய கதை. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒளிபரப்பான மகாபாரதம், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ்க்கடவுள் முருகன் போன்றவை அடங்கும்.
இது இளைஞர்களின் கதைகளை கொண்ட வகை, பள்ளி பருவம், கல்லூரிப்பருவம், இளமை பருவம் போன்ற தருணங்களில் அவர்களின் வாழ்கை தருணத்தை கூறும் தொடர்களை இளமைக்காலத் தொடர்கள் என்று அழைக்கப்படும், இதை ஆங்கிலத்தில் டீன் செரிஸ் (Teen Series) என்று சொல்ல்வார்கள். இப்படி பட்ட தொடர்கள் முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தான் 2005ஆம் ஆண்டில் கானா காணும் காலங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பானது., இந்த தொடருக்கு பிறகு கானா காணும் காலங்கள் பருவம் 2, கானா காணும் காலங்கள்-ஒரு கல்லூரியின் கதை, கானா காணும் காலங்கள்-கல்லூரி சாலை, மற்றும் கள்ளி காட்டு பள்ளிக்கூடம் போன்ற பல டீன் தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த தொடர்களை இளைஞர்கள் மட்டும் இன்றி பெரியவர்கள் மத்தியிலும் பிரபலமானது. சிங்கப்பூர் நாட்டு வசந்தம் தொலைக்காட்சியில் வெற்றி, குருபார்வை போன்ற தொடர்கள் பருவ எண்ணிக்கையின் அடிப்படையில் ஒளிபரப்பாகும்.
திகில் கதை என்பது பேய்களை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர். எம்மை அறியாமலே எமக்குள் ஒரு பயத்தை வரவைக்கும் தொடர்களை திகில் தொடர் எனலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காத்து கருப்பு, சுழியம், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆதிரா, பைரவி, வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இருள் போன்ற தொடர்கள் இதற்குள் அடங்கும்.
நம்ப முடியாத விடயங்களை வியப்பூட்டும் வகை யில் எடுக்கப்படும் தொடர்கள் கற்பனை தொடர்கள் எனலாம்.
சமூகத்தில் நடக்கும் ஜாதி, நிறம், ஏழை பணக்காரன் போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்கள் சமூகத் தொடர்கள் ஆகும். தற்பொழுது கலர்ஸ் தமிழ்லில் ஒளிபரப்பாகும் பேரழகி, சிவகாமி போன்ற தொடர்கள் இதற்குல் அடங்கும்.
கவிதாலயா, ஏவிஎம், ராடான் மீடியாவொர்க்ஸ், விகடன் ஒளித்திரை, சினி டைம்ஸ், ஹோம் மீடியா, யுடிவி, திரு பிக்சர்ஸ், அபிநயா கிரியேஷன்ஸ், சத்ய ஜோதி படங்கள், விஷன் டைம்ஸ், அவ்னி டெலி மீடியா, பாலாஜி டெலிபிலிம்ஸ், சரிகம, சன் என்டர்டெயின்மெண்ட் போன்ற நிறுவனங்கள் பல தொடர்களை தயாரித்து வழங்குகின்றது. ஒரு மொழியில் தயாரித்த தொடர்களை வேறு மொழியில் அதே நிறுவனம் தயாரித்து வழங்கும் வழக்கம் தமிழ் தயாரிப்பு நிறுவனங்களில் உண்டு.
தமிழ்த் தொடர்கள் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், இந்தி, வங்காளம், ஒடிசா, கன்னடம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் மொழி மாற்று செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. குறிப்பாக நந்தினி என்ற தொடர் சகோதர அலைவரிசையான சூர்யா தொலைக்காட்சி, ஜெமினி தொலைக்காட்சி, உதயா தொலைக்காட்சி மற்றும் சன் வங்காள போன்ற அலைவரிசைகளில் ஒளிபரப்பானது.
நீல நிறத்தில் இருக்கும் தொடர்கள் தற்போது வரைக்கும் ஒளிபரப்பாகும் தொடர்கள். |
தலைப்பு | முதல் ஒளிபரப்பு | கடைசியாக ஒளிபரப்பப்பட்டது | அத்யாயங்கள் | அலைவரிசைகள் |
---|---|---|---|---|
வள்ளி | திசம்பர் 17, 2012 | 14 அக்டோபர் 2019 | 1,961 | சன் தொலைக்காட்சி |
சரவணன் மீனாட்சி | நவம்பர் 7, 2011 | 17 ஆகத்து 2018 | 1,765 | விஜய் தொலைக்காட்சி |
வாணி ராணி | சனவரி 21, 2013 | 8 திசம்பர் 2018 | 1,743 | சன் தொலைக்காட்சி |
கல்யாணப்பரிசு | பெப்ரவரி 10, 2014 | ஒளிபரப்பில் | 1,683+ | சன் தொலைக்காட்சி |
கோலங்கள் | மே 29, 2003 | 4 திசம்பர் 2009 | 1,533 | சன் தொலைக்காட்சி |
கஸ்தூரி | ஆகத்து 21, 2006 | 31 ஆகத்து 2012 | 1,532 | சன் தொலைக்காட்சி |
தெய்வமகள் | மார்ச்சு 25, 2013 | 17 பெப்ரவரி 2018 | 1,466 | சன் தொலைக்காட்சி |
சந்திரலேகா | அக்டோபர் 6, 2014 | ஒளிபரப்பில் | 1,458+ | சன் தொலைக்காட்சி |
அவர்கள் | சனவரி 7, 2002 | 2 நவம்பர் 2007 | 1,372 | சன் தொலைக்காட்சி |
திருமதி செல்வம் | நவம்பர் 5, 2007 | 22 மார்ச்சு 2013 | 1,360 | சன் தொலைக்காட்சி |
நாதஸ்வரம் | ஏப்ரல் 19, 2010 | 9 மே 2015 | 1356 | சன் தொலைக்காட்சி |
தற்காப்பு கலை தீர்த்த | சனவரி 14, 2002 | 5 அக்டோபர் 2007 | 1,352 | சன் தொலைக்காட்சி |
தென்றல் | திசம்பர் 7, 2009 | 17 சனவரி 2015 | 1,340 | சன் தொலைக்காட்சி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.