2016 ஐசிசி உலக இருபது20
From Wikipedia, the free encyclopedia
2016 ஐசிசி உலக இருபது20 (2016 ICC World Twenty20) என்பது 2016 ஆம் ஆண்டு மார்ச்சு 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் இடம்பெற்ற பன்னாட்டு இருபது20 உலகத் துடுப்பாட்டப் போட்டித் தொடராகும்.[1][2] உலக இருபது20 போட்டிகளில் இது ஆறாவதாகும். இந்தியாவில் இது முதற்தடவையாக இடம்பெற்றது.[3]
நாட்கள் | 8 மார்ச் – 3 ஏப்ரல் 2016 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | பன்னாட்டு இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை, ஒற்றை வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | இந்தியா |
வாகையாளர் | மேற்கிந்தியத் தீவுகள் (2வது தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 16 |
மொத்த போட்டிகள் | 35 |
தொடர் நாயகன் | விராட் கோலி |
அதிக ஓட்டங்கள் | தமீம் இக்பால் (295) |
அதிக வீழ்த்தல்கள் | முகம்மது நபி (12) |
அலுவல்முறை வலைத்தளம் | www.icc-cricket.com |
← 2014 2020 → |
இந்தியாவின் பெங்களூர், தரம்சாலா, கொல்கத்தா, மொகாலி, மும்பை, நாக்பூர், புது தில்லி ஆகிய ஏழு நகரங்களில் போட்டிகள் இடம்பெற்றன. இறுதிப் போட்டி கல்கத்தாவில் ஈடன் கார்டன்சு அரங்கில் இடம்பெறது. 2014 போட்டியைப் போன்று இம்முறையும் 16 அணிகள் பங்குபற்றின. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் முழுமையான உறுப்புரிமை வகிக்கும் 10 அணிகள் நேரடியாகவும், ஏனைய ஆறு நாடுகள் தெரிவுப் போட்டிகள் மூலமும் தெரிவாயின. கொல்கத்தா ஈடன் கார்டன்சு அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தை நான்கு இழப்புகளால் வென்று உலகக் கோப்பையை இரண்டாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது.