பன்னாட்டு இருபது20
From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டு இருபது20 (Twenty20 International அல்லது T20I)என இரு நாடுகளின் தேசியத் துடுப்பாட்ட அணிகளிடையே ஓரணிக்கு 20 ஓவர்கள் என்ற வடிவத்தில் ஆடப்படும் துடுப்பாட்ட வகை ஆகும். இது இருபது20 துடுப்பாட்ட விதிகளின்படி ஆடப்படுவதாகும். முதல் பன்னாட்டு இருபது20 17 பிப்ரவரி 2005 அன்று ஆத்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே ஆக்லாந்தில் உள்ள ஈடன் பூங்காவில் நடைபெற்றது. ஆத்திரேலியா 44 ஓட்டங்களில் வென்றது.