மொகாலி
பஞ்சாபிலுள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
மொகாலி (பஞ்சாபி:ਮੋਹਾਲੀ,) சாகிப்ஜாதா அஜித்சிங் மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். இது சண்டிகர் நகரை அடுத்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் 18வது மாவட்டமும் நகரமும் ஆகும். சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங்கின் மகன் சாகிப்ஜாடா அஜித்சிங்கின் நினைவில் பெயரிடப்பட்டுள்ளது. சண்டிகர், பஞ்ச்குலாவுடன் இந்நகரமும் இணைந்து சண்டிகர் மூநகர் அல்லது சண்டிகர் தலைநகர் வலயம் என அறியப்படுகிறது. முன்பு ரூப்நகர் மாவட்டத்தின் பகுதியாக இருந்த இந்நகர் தனி மாவட்டமாக அண்மைக்காலத்தில் பிரிக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட நகரம் என்றும் மொகாலி சிறப்பு பெற்றுள்ளது.[3]
விரைவான உண்மைகள்
மொகாலி (சாகிப்ஜாதா அஜித்சிங் நகர்) | |
— நகரம் — | |
அமைவிடம் | 30°47′N 76°41′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | பகவந்த் மான்[2] |
மக்களவைத் தொகுதி | மொகாலி (சாகிப்ஜாதா அஜித்சிங் நகர்) |
மக்கள் தொகை | 1,23,484 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 316 மீட்டர்கள் (1,037 அடி) |
மூடு