குரு கோவிந்த் சிங்
சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி மனித குரு / From Wikipedia, the free encyclopedia
குரு கோவிந்த் சிங் (Guru Gobind Singh, பஞ்சாபி: ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ, டிசம்பர் 22, 1666 - அக்டோபர் 7, 1708) சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார்.இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார். குரு கோவிந்த் சிங் சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மதநூலான குரு கிரந்த் சாகிப்பைச் சீக்கிய மதத்தின் வாழும் குருவாக்கினார்.
விரைவான உண்மைகள் குரு கோபிந்த் சிங், பிறப்பு ...
குரு கோபிந்த் சிங் | |
---|---|
பிறப்பு | கோபிந்த் ராய்ஜி 22 திசம்பர் 1666 பாட்னா,இந்தியா |
இறப்பு | 7 அக்டோபர் 1708 (வயது 41) நாண்டெட்,இந்தியா |
மற்ற பெயர்கள் | பத்தாம் குரு, |
அறியப்படுவது | கல்ஸ தோற்றுவித்தவர் |
முன்னிருந்தவர் | குரு தேக் பகதூர் |
பின்வந்தவர் | குரு கிரந்த சாகிப் |
பெற்றோர் | குரு தேக் பகதூர், மாதா குஜ்ரி |
வாழ்க்கைத் துணை | மாதா சுந்தர் கெளவுர் |
பிள்ளைகள் | சாகிப்ஜடா அஜித் சிங்,சாகிப்ஜடா ஜுகார் சிங்,சாகிப்ஜடா ஜராவர் சிங்,சாகிப்ஜடா பாட்டே சிங் |
மூடு
இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதில் சிறப்புப் பெற்று விளங்கினார்.