2013 மகாராட்டிராவில் வறட்சி
From Wikipedia, the free encyclopedia
2013 மகாராட்டிராவில் வறட்சி (2013 drought in Maharashtra) 2012 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலங்களில் அதாவது பருவ மழை காலத்தில் இந்த பகுதியில் குறைவான மழைப்பொழிவையேப் பெற்றது. மகாராட்டிரா மாநிலத்தில் 2013 வறட்சி பொிய அளவில் ஏற்பட்டது. இது 40 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வறட்சியாக கருதப்படுகிறது. மகாராட்டிராவில் மிக மோசமான பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் சோலாப்பூர், அகமது நகர், சாங்குலி, புனே, சாத்தாரா, பீடு மற்றும் நாசிக். மேலும் லாத்தூர், உஸ்மானாபாத், நாந்தேட், அவுரங்காபாத், ஜால்னா, ஜள்காவ் மற்றும் துளே மாவட்டங்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும்.[1][2]