முதலாம் லியோ (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை முதலாம் லியோ (Pope Leo I) கத்தோலிக்க திருச்சபையின் 45ஆம் திருத்தந்தையாக கி.பி. 440 செப்டம்பர் 29ஆம் நாளிலிருந்து 461, நவம்பர் 10ஆம் நாள் வரை ஆட்சிசெய்தார்.[1]
விரைவான உண்மைகள் திருத்தந்தை புனித முதலாம் லியோ, ஆட்சி துவக்கம் ...
திருத்தந்தை புனித முதலாம் லியோ | |
---|---|
45ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | 29 செப்டம்பர் 440 |
ஆட்சி முடிவு | 10 நவம்பர் 461 |
முன்னிருந்தவர் | மூன்றாம் சிக்ஸ்துஸ் |
பின்வந்தவர் | ஹிலாரியுஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | லியோ |
பிறப்பு | கி.பி. சுமார் 400 தஸ்கனி, இத்தாலி |
இறப்பு | (461-11-10)10 நவம்பர் 461 உரோமை நகரம் |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 10 நவம்பர்; 11 ஏப்ரல் |
ஏற்கும் சபை | கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம் |
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
மூடு
திருச்சபை வரலாற்றிலேயே முதன்முதலாக "பெரிய" ("மகா") என்னும் அடைமொழி பெற்ற முதல் திருத்தந்தை இவரே. இந்த அடைமொழி பெற்ற இரண்டாம் திருத்தந்தை "முதலாம் கிரகோரி" (ஆட்சி: 590-604) ஆவார்.
முதலாம் லியோ கி.பி. சுமார் 400ஆம் ஆண்டில் இத்தாலிய உயர்குடியைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏடு அவர் பிறந்த இடமாக இத்தாலியின் தஸ்கனி பிரதேசத்தைக் குறிக்கிறது.