பதாவுன்
From Wikipedia, the free encyclopedia
பதாவுன் (Budaun) என்பது இந்திய நகரங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் உள்ளது.[1][2] இது சோட் நதிக்கு கிழக்கே ஒரு மைல் தொலைவிலும், கங்கைக்கு வடக்கே 27 கிமீ தொலைவிலும், உத்தரபிரதேசத்தின் ரோகில்கண்ட் பகுதியில் அமைந்துள்ளது.[3] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இது 159,221 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. தற்போது 161,555 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது.[4] இங்கு இசுலாமிய மக்களும், இந்துக்களும் வாழ்கின்றனர். சாலைப் போக்குவரத்திற்கு மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இங்கு தொடருந்து நிலையமும் உள்ளது. இங்கு அதிகளவிலான பள்ளிவாசல்கள் உள்ளன. வேளாண்மை முதன்மைத் தொழிலாக உள்ளது. பரேய்லி நகரம் இதன் அருகிலுள்ளது. உள்ளூர் அளவில் சிறு தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. இது பரேய்லி கோட்டத்திற்கு உட்பட்டது.
பதாவுன் | |
---|---|
City | |
ஆள்கூறுகள்: 28.05°N 79.12°E / 28.05; 79.12 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
பிராந்தியம் | ரோகில்கண்ட் |
பிரிவு | பராலி |
மாவட்டம் | பதாவுன் |
குடியேற்றம் | பொ.ஊ 905 (நவீன நகரம்), கி.பி. 220 (பழைய நகரம்) |
பெயர்ச்சூட்டு | இளவரசர் புத்தர் |
அரசு | |
• நிர்வாகம் | பதாவுன் நகராட்சி நிர்வாகம் |
• தலைவர் | பாத்திமா ரசா |
• நாடளுமன்ற உறுப்பினர் | சங்கமித்ர மௌரியா |
• சட்டமன்ற உறுப்பின | மகேசு சந்திர குப்தா |
பரப்பளவு | |
• மொத்தம் | 81 km2 (31 sq mi) |
ஏற்றம் | 164 m (538 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,59,221 |
• தரவரிசை | 17 |
• அடர்த்தி | 5,489/km2 (14,220/sq mi) |
இனம் | பதாயுனி |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, உருது, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 243601 |
தொலைபேசி இணைப்புக் குறியீடு | 05832 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | உபி-24 |
கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
பாலின விகிதம் | 907 பெண்கள்/1000 ஆண்கள் |
கல்வியறிவு | 73.00% |
நிர்வாகம் | பதாவுன் மேம்பாட்டு ஆணையம் |
அரசு | உத்தரப் பிரதேச அரசு இந்திய அரசு |
தட்ப வெப்ப நிலை | இந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென்) |
மழைப்பொழிவு | 843 மில்லிமீட்டர்கள் (33.2 அங்) |
சராசரி ஆண்டு வெப்பநிலை | 27.5 °C (81.5 °F) |
சராசரி கோடை வெப்பநிலை | 39.8 °C (103.6 °F) |
சராசரி குளிகால வெப்பநிலை | 11.5 °C (52.7 °F) |
இணையதளம் | www |
'புனிதர்களின் நகரம்' அல்லது 'மதீனத் உல் அவ்லியா' என்றும் 'மெந்தா நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இது வெற்றிலை பீடாக்களுக்கு பிரபலமானது. |
சுல்தான் இல்த்துத்மிசு ஆட்சியின் போது பொ.ஊ 1210 முதல் 1214 வரை நான்கு ஆண்டுகள் தில்லி சுல்தானகத்தின் தலைநகராக பதாவுன் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருந்தது. இது முகலாய ஆட்சியின் போது வடக்கு எல்லையில் மிக முக்கியமான நகரமாக இருந்தது. பதாவுன் ஒரு பெரிய சந்தையாகவும் வரலாற்றுப் புகழ்பெற்ற மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் இருந்துள்ளது. புது தில்லியிலிருந்து தென்கிழக்கே 230 கிமீ தொலைவிலும், இலக்னோவிலிருந்து வடமேற்கே 245 கிமீ தொலைவிலும் உள்ளது. இவை இரண்டையும்ம் சாலை வழியாக அடைய சுமார் 6 மணிநேரம் ஆகும்.[5]
இல்த்துத்மிசு கட்டிய பழைய பள்ளி வாச்லும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது. இசுலாமிய அரசர்கள் கட்டிய கோட்டைகளும் இங்குள்ளன.