சம்சுத்தீன் இல்த்துத்மிசு
From Wikipedia, the free encyclopedia
சம்சுத்தீன் இல்த்துத்மிசு, அல்லது அல்தமாசு, தில்லி சுல்தானகத்தின் மூன்றாவது முசுலிம் துருக்க சுல்தானும், மம்லுக் வம்சம் அல்லது தில்லி அடிமை வம்சம் எனப்படும் வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரும் ஆவார். இவர் முதலில் குதுப்புத்தீன் ஐபாக்கின் அடிமையாக இருந்தார். பின்னர் ஐபாக்கின் மகளை மணந்து அவரது மருமகனும் நெருக்கமான தளபதியும் ஆனார். ஐபாக் இறந்த பின்னர் அவரது மகன் அராம் சா சுல்தானானார். அப்போது பதாவுனின் ஆளுனராக இருந்த இல்த்துத்மிசு அவரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டுத் தானே 1211 ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் 1236 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி இறக்கும் வரை தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளனாக இருந்தார்.
சம்சுத்தீன் இல்த்துத்மிசு | |
---|---|
சுல்தான் | |
குதுப் மினார் வளாகத்தில் இல்த்துத்மிசுவின் சமாதி | |
3ஆம் தில்லி சுல்தான் | |
ஆட்சிக்காலம் | சூன் 1211 – 30 ஏப்ரல் 1236 |
முன்னையவர் | ஆராம் ஷா |
பின்னையவர் | உருக்னுத்தீன் பிரூசு |
பிறப்பு | தெரியவில்லை நடு ஆசியா[1] |
இறப்பு | 30 ஏப்ரல் 1236 தில்லி, தில்லி சுல்தானகம் |
புதைத்த இடம் | |
வாழ்க்கைத் துணைகள் | துர்கன் கதுன், குத்புத்தீன் ஐபக்கின் மகள் (பட்டத்து இராணி)[2][முதன்மையற்ற ஆதாரம் தேவை]
ஷா துர்கன் மலிகா-இ-சகான்[2][முதன்மையற்ற ஆதாரம் தேவை] |
குழந்தைகளின் பெயர்கள் | நசிருத்தீன் மகுமூது இரசியா சுல்தானா முயீசுத்தீன் பக்ரம் உருக்னுத்தீன் பிரூசு நசிருத்தீன் மகுமூது ஷா (ஒரு பேரனாக ஒரு வேளை இருந்திருக்கலாம்[3][4]) கியாசுத்தீன் முகம்மது ஷா[5] சலாலுத்தீன் மசூது ஷா[6] சிகாபுத்தீன் முகம்மது [7] குத்புத்தீன் முகம்மது [5] பெயரிடப்படாத ஒரு மகள்[8] சசியா பேகம் [9] [முதன்மையற்ற ஆதாரம் தேவை] |
தந்தை | இலாம் கான் |
மதம் | சன்னி இசுலாம் |
மெக்ராலியிலுள்ள அவுசு-இஸாம்சி எனப்படும் நீர்த்தேக்கத்தை 1230 ஆம் ஆண்டு இவர் கட்டினார். பிற்காலத்தில் முகலாய மன்னர்கள் பயன்படுத்திய சான்சு மகால் இந்த நீர்த்தேக்கத்தின் கரையிலேயே உள்ளது.