தாமோதர பாண்டே
From Wikipedia, the free encyclopedia
தாமோதர பாண்டே (Damodar Pande) (நேபாளி: दामोदर पाँडे) (1752 – மார்ச் 13, 1804) ஷா வம்ச, நேபாள இராச்சியத்தின் மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் முதல் பிரதம அமைச்சராக, 1799 முதல் 1804 முடிய பதவி வகித்தவர்.[2]
விரைவான உண்மைகள் பிரதம அமைச்சர் மூல்காஜி சாகிப்தாமோதர பாண்டே, முதல் நேபாள பிரதம அமைச்சர் (மூல்காஜி) ...
பிரதம அமைச்சர் மூல்காஜி சாகிப் தாமோதர பாண்டே | |
---|---|
श्री मूलकाजी साहेब दामोदर पाँडे | |
![]() தாமோதர பாண்டே | |
முதல் நேபாள பிரதம அமைச்சர் (மூல்காஜி) | |
மூல்காஜி | |
பதவியில் 1799–1804 | |
ஆட்சியாளர் | கீர்வான் யுத்த விக்ரம் ஷா |
பின்னவர் | ரணஜித் பாண்டே |
தலைமைப் படைத்தலைவர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கிபி 1752 |
இறப்பு | கிபி 1804 |
தேசியம் | நேபாளி |
பிள்ளைகள் | 5 மகன்கள்: ரணகேஸ்வர் பாண்டே, ரணபம் பாண்டே, ராணதல் பாண்டே, ராணா ஜங் பாண்டே, கரவீர பாண்டே[1] |
பெற்றோர் |
|
Military service | |
பற்றிணைப்பு | ![]() |
தரம் | தலைமைப் படைத்தலைவர் |
போர்கள்/யுத்தங்கள் | சீன நேபாளப் போர் |
மூடு
இவரது தந்தை கலு பாண்டே, நேபாள இராச்சியத்தை நிறுவிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் கஜி எனும் பதவியில் அமைச்சர் இருந்தவர். தாமோதர பாண்டே, இமயமலை சத்திரிய இனங்களில் ஒன்றான சேத்திரி பிரிவைச் சேர்ந்தவர்.
1752ல் கோர்காவில் பிறந்த தாமோதர பாண்டே, சீன - நேபாளப் போரின் போது, நேபாளப் படைத்தலைவராக பணியாற்றியவர்.[3][4][5]