![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/77/Le_temple_de_Brihadishwara_%2528Tanjore%252C_Inde%2529_%252814354574611%2529.jpg/640px-Le_temple_de_Brihadishwara_%2528Tanjore%252C_Inde%2529_%252814354574611%2529.jpg&w=640&q=50)
தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தஞ்சாவூர் ஆகும். இந்த மாவட்டம் 3,411 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்' என தஞ்சாவூர் அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூர் | |
மாவட்டம் | |
![]() தஞ்சைப் பெருவுடையார் கோயில் | |
![]() தஞ்சாவூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைநகரம் | தஞ்சாவூர் |
பகுதி | மத்திய மாவட்டம் |
ஆட்சியர் |
திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு. ஆசிசு இராவத், இ.கா.ப. |
மாநகராட்சி | 2 |
நகராட்சிகள் | 2 |
வருவாய் கோட்டங்கள் | 3 |
வட்டங்கள் | 10 |
பேரூராட்சிகள் | 20 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 14 |
ஊராட்சிகள் | 589 |
வருவாய் கிராமங்கள் | 906 |
சட்டமன்றத் தொகுதிகள் | 8 |
மக்களவைத் தொகுதிகள் | 2 |
பரப்பளவு | 3,411 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
24,05,890 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
613 xxx |
தொலைபேசிக் குறியீடு |
04362, 0435 |
வாகனப் பதிவு |
TN-49, TN-68 |
பாலின விகிதம் |
1035 ♂/♀ |
கல்வியறிவு |
82.64% |
இணையதளம் | thanjavur |
தஞ்சாவூரானது, மாநிலத்தின் 12-ஆவது மாநகராட்சியாக, 2014 ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. புவியின் 9.50 முதல் 11.25 வரையிலான கடகரேகை மற்றும் 78.43. முதல் 70.23 வரையிலான அட்சரேகை இடையே உள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் பெரிய பரப்பளவில் இருந்ததால், அதன் நிருவாக நலன் கருதி நாகப்பட்டினம், மன்னார்குடி, மயிலாடுதுறை கோட்டங்களையும், கும்பகோணம் கோட்டத்திலிருந்து, வலங்கைமான் வட்டத்தையும் பிரித்து, நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம் சனவரி 19, 1991 அன்று உருவாக்கப்பட்டது. பின்னர் நிருவாக நலன் கருதி 1997-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து, நாகப்பட்டினம் கோட்டத்திலிருந்து நன்னிலம், குடவாசல், திருவாரூர் வட்டங்களைப் பிரித்து மற்றும் மன்னார்குடி கோட்டங்களை உள்ளடக்கிய திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக திருவாரூர் தோற்றுவிக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை கோட்டங்களை உள்ளடக்கிய மயிலாடுதுறை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக மயிலாடுதுறை தோற்றுவிக்கப்பட்டது.