![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a5/Indian_Election_Symbol_Bow_And_Arrow.svg/langta-640px-Indian_Election_Symbol_Bow_And_Arrow.svg.png&w=640&q=50)
சிவ சேனா
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
சிவ சேனா (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். சிவ சேனா என்பது சிவாவின் படைகள் என்னும் பொருள்படும். இங்கே சிவா என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான சிவாஜியைக் குறிக்கிறது. இந்துக் கடவுளான சிவனை அல்ல. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன்று பால் தாக்கரேவால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரே ஆவார்[1][2]. மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி தொடக்க காலத்தில் தென் இந்தியர்களுக்கு எதிராக மும்பை நகரில் நடந்த பல கலவரங்களுக்கு காரணமாக இருந்தது.
சிவ சேனா | |
---|---|
தலைவர் | ஏக்நாத் சிண்டே |
நிறுவனர் | பால் தாக்கரே |
மக்களவைத் தலைவர் | விநாயக் பாவுராவ் |
தொடக்கம் | 19 சூன் 1966 (58 ஆண்டுகள் முன்னர்) (1966-06-19) |
தலைமையகம் | சிவசேனா இல்லம், தாதர், மும்பை, மகாராட்டிரம் |
மாணவர் அமைப்பு | பாரதிய வித்யார்த்தி சேனா (BVS) |
இளைஞர் அமைப்பு | யுவ சேனா |
பெண்கள் அமைப்பு | சிவசேனா மகிளா அகாதி |
கொள்கை | பழைமைவாதம் இந்துத்துவம் |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி |
கூட்டணி | தேஜகூ (1998–2019,2022-முதல்) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 7 / 545 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 5 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராஷ்டிர சட்டமன்றம்) | 40 / 288 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராட்டிரம் மேல்சபை) | 4 / 78 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
shivsena | |
இந்தியா அரசியல் |
பின் இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறிய இக்கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இதன் தேர்தல் சின்னம் வில் - அம்பு ஆகும்.
சிவ சேனாவின் பால் தாக்ரே, பாசகவின் மகாஜன் முயற்சியில் 1989ஆம் ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் 2014 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் 2014, செப்டம்பர் 25 அன்று பாசக- சிவ சேனா கூட்டணி முறிந்ததாக பாசக அறிவித்தது[3][4] 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள்.[5] 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது.[6]
- 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் 19வது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2022ல் கட்சியில் பிளவு ஏற்பட்டடது. ஏக்நாத் சிண்டே தலைமையில் மகாராட்டிரா அரசு நிறுவப்பட்டது. பெரும்பாலான சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் சிண்டே பக்கம் சென்றனர். தேர்தல் ஆணையம் ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவ சேனா பிரிவு தான் உண்மையான சிவ சேனா கட்சி என 17 பிப்ரவரி 2023 அன்று அங்கீகாரம் வழங்கியது.[7]