![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Flag_of_Japan_%25281870%25E2%2580%25931999%2529.svg/langta-640px-Flag_of_Japan_%25281870%25E2%2580%25931999%2529.svg.png&w=640&q=50)
சிங்கப்பூரில் சப்பானிய ஆக்கிரமிப்பு
சிங்கப்பூர் மீது ஜப்பானிய இராணுவ ஆட்சி (1942-1945) / From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூரில் சப்பானிய ஆக்கிரமிப்பு அல்லது சிங்கப்பூரில் சப்பானிய ஆட்சி (ஆங்கிலம்: Japanese Occupation of Singapore; மலாய்: Pendudukan Jepun di Singapura) என்பது 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் 1945 ஆகஸ்டு 15-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சப்பானிய இராணுவம் சிங்கப்பூரை ஆக்கிரமிப்பு செய்ததைக் குறிப்பிடுவதாகும். 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி நடந்த சிங்கப்பூர் போரில் ஒருங்கிணைந்த பிரித்தானிய நேச நாட்டுப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. பின்னர் பிரித்தானிய இராணுவப் படைகள்; ஏகாதிபத்திய சப்பானிய இராணுவத்திடம் சரணடைந்தன.
Japanese Occupation of Singapore 昭南島 Shōnantō | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1942–1945 | |||||||||
நாட்டுப்பண்: (ஆங்கிலம்: "His Imperial Majesty's Reign")[1] | |||||||||
![]() | |||||||||
![]() 1942-இல் சப்பானிய பேரரசு உச்சத்தில் இருந்த போது:
பிரதேசம் (1870–1895) கையகப்படுத்தியவை (1895–1930) கையகப்படுத்தியவை (1930–1942) | |||||||||
நிலை | சப்பானிய பேரரசின் இராணுவ ஆக்கிரமிப்பு | ||||||||
அதிகாரப்பூர்வ மொழி தேசிய மொழி | சப்பானியம் | ||||||||
பொது மொழிகள் | சீனம்; ஆங்கிலம்; மலாய்; தமிழ் | ||||||||
சமயம் | சிந்தோ சமயம்; பௌத்தம்; கிறிஸ்தவம்; இசுலாம்; தாவோயியம்; இந்து சமயம்; சீக்கியம் | ||||||||
அரசாங்கம் | இராணுவ ஆக்கிரமிப்பு ஒருமுக அரசு; அரசியல்சட்ட முடியாட்சி சர்வாதிகாரம் | ||||||||
மாமன்னன் | |||||||||
• 1942-1945 | இறோகித்தோ | ||||||||
பிரதமர் | |||||||||
• 1942-1944 | இடாக்கி தோஜோ | ||||||||
• 1944-1945 | குனியாக்கி கொய்சோ | ||||||||
வரலாற்று சகாப்தம் | இரண்டாம் உலகப் போர் | ||||||||
8 டிசம்பர் 1941a | |||||||||
15 பிப்ரவரி 1942 | |||||||||
• சிங்கப்பூர் குண்டுவீச்சு | நவம்பர் 1944 – மே 1945 | ||||||||
• சப்பான் சரணடைதல் | 15 ஆகஸ்டு 1945 | ||||||||
• தைடர்ரேசு படை நடவடிக்கை | 4–12 செப்டம்பர் 1945 | ||||||||
• சிங்கப்பூர் காலனிய முடியாட்சி | 1 ஏப்ரல்1946 | ||||||||
நாணயம் | சப்பானிய அரசாங்க டாலர் ("வாழைமரக் காசு") | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | சிங்கப்பூர் |
ஒருங்கிணைந்த பிரித்தானிய நேச நாட்டுப் படைகளில்; பிரித்தானிய போர் வீரர்கள், இந்திய இராணுவ வீரர்கள், ஆஸ்திரேலிய போர் வீரர்கள், மலாயா போர் வீரர்கள், நீரிணை குடியேற்ற போர் வீரர்கள், சிங்கப்பூர் போரில் பங்கெடுத்துக் கொண்டனர்.
சப்பான், ஐக்கிய இராச்சியம், மற்றும் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளின் வரலாற்றில்; சிங்கப்பூர் மீதான சப்பானிய ஆக்கிரமிப்பு ஒரு முக்கியத் திருப்புமுனையாக மாறியது. அத்துடன் சிங்கப்பூர் போர் நடந்து முடிந்த சில நாட்களில் சிங்கப்பூரின் பெயரும் மாற்றப்பட்டது.
சிங்கப்பூருக்கு சப்பானியப் பேரரசு முதன்முதலில் வழங்கிய பெயர் சோனான் ஆங்கிலம்: Syonan Island; மலாய்: Syonanto; சப்பானியம்: 昭南島). அதன் பின்னர் சப்பானிய இராணுவம் சிங்கப்பூரை ஆட்சி செய்யத் தொடங்கியது.[2][3]