From Wikipedia, the free encyclopedia
சணல் (Hemp), அல்லது தொழில்சார் சணல் (industrial hemp), என்பது சணவிசு சத்தைவா (Cannabis sativa)எனும் தாவரச் சிற்றினத்தின் வகையாகும். இது தொழில்சார் பயன்களுக்காக வளர்க்கப்படும் பயிராகும்.[1] இது மிக வேகமாக வளரும் பயிர்களில் ஒன்றாகும்.[2] மேலும் இது 10,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார் திரிக்கப் பயன்பட்ட பயிராக விளங்கியது.[3] இது பலவணிகப் பொருள்களைச் செய்யப் பயன்படுகிறது. தாள், துணி, உடை, உயிரியலாக சிதைவுறும் நெகிழி, நெய்வணம், உயிர் எரிபொருள், உணவு, கால்நடைத் தீவனம், காப்பீட்டுப் பொருள்கள் போன்ற பொருள்களைச் சணலைப் பதப்படுத்திப் பெறலாம்.[4][5]
,
சணவிசு மருந்துப் பயிரும் தொழில்சார் சணலும் சணவிசு சத்தைவா எனும் சிறப்பினத்தில் இருந்தே தோன்றினும் நானீரச் சணவுனோ (tetrahydrocannabino-THC) எனும் உளத்தூண்டல் பொருளைக் கொண்டிருப்பினும், இவை மரபியலாக தாவர-வேதி உட்கூறிலும் பயன்களிலும் பெரிதும் விலகிய பயிர்களாகும்.[6] சணலில் நானீரச் சணவினோ மிகக் குறைவாக உள்ளதால் இதன் உளத் தூண்டல் விளைவு மிகவும் அருகிவிடுகிறது.[6] தொழில்சார் சணலின் சட்டவியலான ஏற்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. சில நாடுகள் நானீரச் சணவினோ அளவு குறைவாய் உள்ள தொழில்சார் சணலை மட்டுமே ஏற்கின்றன.[7][8]
சணல் தாள், துணி, உடை, உயிரியலாக சிதைவுறும் நெகிழி, நெய்வணம், உயிர் எரிபொருள், உணவு, கால்நடைத் தீவனம், காப்பீட்டுப் பொருள்கள் போன்ற பல வணிகப் பொருள்களைச் செய்ய பயன்படுகிறது.[4] சணல் நாரிழைகள் துணிகள் நெய்யப் பயன்படுகின்றன. என்றாலும் இவை கம்பளி, பட்டு, பருத்தி, செயற்கை இழைகள் போன்றவற்றுடன் கலந்தும் நெய்யப்படுகின்றன. இதன் உள்ளிழைகள் கட்டையாக அமைவதால் விலங்குப் படுக்கை உருவாக்கப் பயன்படுகிறது. சணல்விதை எண்ணெய் உயிரகமேற்று திண்மையாக மாறுவதால் நெய்வணம் செய்யவும் குழைவைகளுக்கும் நெகிழிகளுக்கும் சமையல் பொருள்களுக்கும் ஈரப்பதனதஊட்டும் பொருளாகவும் பயன்படுகிறது. சணல்மணிகள் பறவைத் தீவனமாகவும் பயன்படுகிறது.[9] 2003 ஆம் ஆண்டு கள ஆய்வில் சணல் விதைமணிகள் ஐரோப்பாவில் விலங்கு, பறவைத் தீவனமாகவே பயன்படுதல் அறியப்பட்டது.[10]
சணல் இலைகள் உலகின் பல பகுதிகளில் நுகரப்படுகின்றன. அதொரு பிரபலமான தாவரமாக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. நைஜீரியாவின் யோருபா அதை "ஈவேடு" என்றும் மாலியின் சோங்ஹே அதை "பாக்கோஹோய்" என்றும் அழைக்கின்றனர். அது பொதுவான முசிலாஜினோஸ் (ஏதோரு "ஸ்லிம்மி") சூப் அல்லது சாஸ் என்று சில மேற்கு ஆப்பிரிக்க சமையல் மரபுகளில் அழைக்கப்படுகிறது. அதேபோல ஈகிப்ததில் முலுக்கியா என்றழைக்கப்பட்டு தேசிய உணவாகக் கருதப்படுகிறது. அது பிலிப்பைன்ஸ்சின் வடக்கு மாகாணங்களில் பிரபல உணவாக உள்ளது; அங்கு அது சாலுயோட் என அறியப்படுகிறது. சணல் இலைகள் மேற்கு கென்யாவின் லூய்ஹியா மக்கள் மத்தியிலும் நுகரப்படுகிறது. அங்கு அது பொதுவாக "ம்ரெண்டா" அல்லது "மூரெரெ" என அறியப்படுகிறது. அது 'உகாலி'யுடன் உண்ணப்படுகிறது. 'உகாலி' கென்யாவின் பெரும்பாலான சமூகங்களின் சத்துணவாகவும் உள்ளது. இலைகள் பேடாகாரோடென், இரும்பு,கால்சியம், மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றில் வளமாக உள்ளது. தாவரம் 'வைட்டமின் ஈ' க்கு இணையானதொரு ஆண்டிஆக்சிடெண்ட் நடவடிக்கையை கணிசமான α-டோக்கோபெரோல் உடன் கொண்டுள்ளது.
உணவாற்றல் | 2451 கிசூ (586 கலோரி) |
---|---|
4.67 g | |
சீனி | 1.50 g 0.07 g |
நார்ப்பொருள் | 4.0 g |
48.75 g | |
நிறைவுற்றது | 4.600 g |
மாறுபக்கம் | 0 g |
ஒற்றைநிறைவுறாதது | 5.400 g |
பல்நிறைவுறாதது | 38.100 g 9.301 g 28.698 g |
31.56 g | |
டிரிப்டோபான் | 0.369 g |
திரியோனின் | 1.269 g |
ஐசோலியூசின் | 1.286 g |
லியூசின் | 2.163 g |
லைசின் | 1.276 g |
மெத்தியோனின் | 0.933 g |
சிஸ்டைன் | 0.672 g |
பினைல்அலனின் | 1.447 g |
டைரோசின் | 1.263 g |
வாலின் | 1.777 g |
ஆர்ஜினின் | 4.550 g |
ஹிஸ்டிடின் | 0.969 g |
அலனைன் | 1.528 g |
அஸ்பார்டிக் அமிலம் | 3.662 g |
குளூட்டாமிக் காடி | 6.269 g |
கிளைசின் | 1.611 g |
புரோலின் | 1.597 g |
செரைன் | 1.713 g |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (0%) 1 மைகி(0%) 7 மைகி |
உயிர்ச்சத்து ஏ | 11 அஅ |
தயமின் (B1) | (111%) 1.275 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (24%) 0.285 மிகி |
நியாசின் (B3) | (61%) 9.200 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (46%) 0.600 மிகி |
இலைக்காடி (B9) | (28%) 110 மைகி |
உயிர்ச்சத்து பி12 | (0%) 0 மைகி |
உயிர்ச்சத்து சி | (1%) 0.5 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (5%) 0.80 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (7%) 70 மிகி |
இரும்பு | (61%) 7.95 மிகி |
மக்னீசியம் | (197%) 700 மிகி |
மாங்கனீசு | (362%) 7.600 மிகி |
பாசுபரசு | (236%) 1650 மிகி |
பொட்டாசியம் | (26%) 1200 மிகி |
சோடியம் | (0%) 5 மிகி |
துத்தநாகம் | (104%) 9.90 மிகி |
நீர் | 4.96 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன |
சணல் பருத்திக்கு அடுத்து, இரண்டாவது மிக முக்கிய தாவர இழையாக பயிரிடுதல் மட்டுமல்லாது பல்வேறு பயன்பாடுகளுகளும் உடைத்தது. சணல் முக்கியமாக கச்சா பருத்தியின் பேல்களை உருட்டி மடக்கவும், சாக்குப் பைகள் மற்றும் துணி உற்பத்திச் செய்யவும், கரடுமுரடான துணிகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இழைகள் திரைச்சீலைகள், நாற்காலி உறைகள், தரை விரிப்புகள், தள விரிப்புகள், ஹெஸ்ஸியன் துணிகள் மற்றும் இலினோலியத்தை(தரையமை விரி) தாங்கவும் நெய்யப்படுகின்றது.
அதே சமயம் சணல் செயற்கைப் பொருட்களால் இது போன்ற பயன்பாடுகளில் இடம் மாற்றப்படுகின்றது. சணலின் மக்கும் தன்மையை சில பயன்பாடுகள் சாதகமாக எடுத்துக் கொள்கின்றன; குறிப்பாக எங்கு செயற்கை பொருந்தாமற் போகுமோ, அங்கெல்லாம் அத்தகைய பயன்பாடுகளின் சில எடுத்துக் காட்டுகளாக; மரம் நடும் சட்டிகள் வேர்களை தொந்திரவு செய்யாமல் நேரடியாக நடப்பட ஏதுவாக்கும், மரநடுகையின் போது சணற்றுணி இயற்கைக் காற்றோட்டத்தை தடைசெய்யாமல், மண் அரிப்பை தடுக்க வழிசெய்கிறது.
இழைகள் தனியாகவோ அல்லது இதர வகை இழைகளுடனோ இணைத்து கடுநூலையும் கயிறையும் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சணலின் தடித்த முனைகள், செடியின் முரட்டுத்தனமான இறுதிப் பகுதிகள் விலை மலிவான துணிகளைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. மாற்றாக, சணலின் சிறந்த நூல்கள் தனியே பிரிக்கப்பட்டு பட்டின் சாயல் செய்யப்படுகிறது. சணல் இழைகள் காகிதக் கூழ் அல்லது காகிதம் செய்யவும் பயன்படுகின்றன. மேலும் மரக் காகிதக் கூழில் பெரும்பாலான காகிதங்களைச் செய்ய வனங்களை அழிப்பது குறித்த அதிகரித்து வரும் கவலை இந்தப் பயன்பாட்டிற்கான சணலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாம். சணலுக்கு நீண்ட கால பயன்பாட்டு வரலாறு கோணிப்பைகள், துணி சுற்ற (பருத்தி பேல்), கட்டுமானத் துணி மற்றும் உற்பத்தித் தொழில் ஆகியவற்றில் உள்ளது.
மரபு ரீதியிலான சணல் சவுளி இழைகள் செல்லுலோசு (தாவர இழை உள்ளடக்கம்) மற்றும் லிக்கின் (மர இழை உள்ளடக்கம்) எனும் காரணத்தினால் மரபார்ந்த சவுளி இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்டன. வாகனம், காகிதக் கூழ் மற்றும் காகிதம், மரச் சாமான்கள் மற்றும் அடுக்கமைவு/படுக்கைத் தொழில்கள் முதலிய தொழிற்றுறைகள் சணல் மற்றும் அதன் உப இழைகளை கொண்டு சவுளியல்லாத பிற பயன்பாடு கருதிய துணிவகைகள், இதர பாகங்களை வடிவமைத்துக் கொள்ளவும், சணலுக்கு பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகையால், சணல் சவுளி இழையாக மட்டும் பார்க்கப்படும் நிலையிலிருந்து மாறி அதன் புதிய அடையாளமான அதாவது மர இழை என்பதை நோக்கிச் செல்கிறது. சவுளி இழை என சணல் அதன் எல்லைய எட்டிவிட்டது, ஆனால் ஒரு மர இழையாக சணல் சாத்தியமான எதிர்காலத்தைக் கொண்டுள்ளது.[11]
சணல் எண்ணற்ற துணிகளை ஹெஸ்ஸியன் துணி, கோணி, மெல்லிய திரைச் சீலை, தரை விரிப்பு மேல் துணி (CBC) மற்றும் ஓவியம் வரைதுணி போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகிறது. ஹெஸ்ஸியன், கோணியை விட எடைக் குறைவானது; பைகள், உறைகள், சுவர்-மேலொட்டிகள், அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் வீட்டு அலங்காரங்களுக்கு பயன்படுகிறது. கோணிப்பை கடுமையான சணல் இழைகளால் செய்யப்படுவதாகும். சணலால் செய்யப்பட்ட CBC இரு வகைகளில் வருகிறது. முதன்மை CBC ஒரு நூற்குஞ்சம் கொண்ட தளத்தையும், அதேப் போல் இரண்டாவது CBC முதலாவதின் மேல் விரிப்பிற்கு பின்னணியை கொடுக்கிறது. சணல் பொதிகள் சூழல்-நட்பு மாற்றாகப் பயன்படுகிறது.
பலதரப்பட்ட சணற் பொருட்கள் அதிகளவில் நுகர்வோருக்கு மதிப்புடையதாக ஆகியுள்ளன. அவற்றில் காலணிகள், தரை விரிப்புகள், வீட்டு ஜவுளிகள், உயர் பயன்பாட்டு தொழில் நுட்ப ஜவுளிகள், ஜியோடெக்ஸ்டைல்ஸ், ஒருங்கிணைப்புக்கள் மற்றும் பலவாக உள்ளடங்கியுள்ளன.
சணற் பைகள் ஃபேஷன் மற்றும் ஃபிரமோஷனல் பைகள் செய்ய பயன்படுகின்றன. சூழல்-நட்பு தன்மையுடைய சணல் பெரும் நிறுவனங்களின் பரிசுப் பொருட்களுக்கு பொருத்தமாகவுள்ளன.
சணல் தரை விரிப்புகள் நூற்கப்பட்ட மற்றும் நூற்குஞ்சமுள்ள மற்றும் மென்மயிர் தரைவிரிப்புக்களில் அடங்கும். சணற் பாய்கள் மற்றும் 5 / 6 மீட்டர் அகலம் நீண்ட நீளம் கொண்ட பாய்கள் தென் இந்தியாவின் பகுதிகளில் எளிமையாக நெய்யப்படுகின்றன. உறுதியாகவும் அழகான நிறச் சாயல்களில், பல்வேறு நெசவு முறைகளில் போக்லே, பனாமா, ஹெர்ரிங்கோன் முதலியவைகளில் நெய்யப்படுகிறது. சணற் பாய்கள் & ரக்குகள் மின் நெசவு & கைத்தறிகளில் இந்தியாவின் கேராளாவில் பெரிய அளவில் நெய்யப்படுகின்றன. மரபார்ந்த சடராஞ்சி பாய்கள் வீட்டு அலங்காரத்தில் மிகப் பிரபலமாக மாறி வருகிறது. சணல் நூற்பற்றன மற்றும் ஒருங்கிணைப்புக்கள் கீழிடவும், லினோலியம் கீழிடுதலுக்கும் மற்றும் பலவற்றிற்கும் பயன்படுகின்றன.
சணல் பல நன்மைகளை வீட்டு ஜவுளியாக பருத்தியை மாற்றவோ அல்லது அதனுடன் கலந்து பயன்படுத்துதலையோ வைத்துள்ளது. அது ஒரு வலுவான, நீடித்த, நிறமுடைய மற்றும் லைட்-ஃபாஸ்ட் இழையாகும். அதன் புற ஊதா பாதுகாப்பு, சப்தம் மற்றும் வெப்ப பிரித்துவைத்தல், குறை வெப்ப கடத்திப் பண்பு மற்றும் விரைப்பற்றத் தன்மை அதனை வீட்டு அலங்காரங்களுக்கு ஏற்ற தேர்வாக்குகிறது. மேலும், சணல் துணிகள் கரிய அமில வாயு சிக்கலுக்கு மிதமான ஏற்புடையவை மற்றும் இயற்கையாகவே மக்கும் தன்மையுடையவையாகும். இத்தகைய குணங்கள் சணலை உயர் செயல்பாட்டு தொழில்நுட்ப சவுளிகளில் பயன்படவும் செய்யும்.[12]
மேலும், சணல் 4-6 மாதங்களில் வளர்க்கப்படலாம். சணல் ஹர்ட்டிலிருந்து (உள்ளிருக்கும் மரக் கொட்டை அல்லது சணல் தண்டின் பேரன்சீமா) ஏராளமான செல்லுலோஸ் எடுக்கப்படுவது உலகின் பெரும்பாலான மரத் தேவைகளை பூர்த்தி செய்யப்பயன்படும். சணல் தொழில்மயமாக்கலினால் சாத்தியப்படும் காடழிப்பினை பாதுகாக்க இதர பயிர்களுடனான பெரிய பயிராக விளங்குகிறது.
ஆக, சணல் மிக சூழல்-நட்புடனானதாக இழை விதையிலிருந்து காலவதியான இழை வரை உள்ளது; காலவதியான இழைகள் ஒருமுறைக்கு மேல் மறு சுழற்சி செய்யப்படலாம்.
சணல் கில்லி சூட்ஸ் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கில்லி சூட்ஸ் கேமோபிளெக் மற்றும் புற்கள் அல்லது குட்டைச் செடிகள் போன்றவையாக பயன்படுகின்றது.
மற்றொரு பலதரப்பட்ட சணல் பொருள் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் ஆகும். அவை விவசாயத் துறையில் இதை பிரபலமான விவசாயப் பொருளாக ஆக்கியுள்ளது. அது ஒரு மெல்லியதாக இழையப்பட்ட துணியாக இயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். மண் அரிப்பு கட்டுப்பாட்டிற்கும், விதை பாதுகாப்பிற்கும், களை கட்டுப்பாட்டிற்கும், இன்னும் பல இதர விவசாய மற்றும் நில வடிவமைப்பு பயன்களுக்கும் பயன்படுகிறது. ஜியோடெக்ச்டைல்ஸை ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்த இயலும். மேலும் மக்கும் சணல் ஜியோடெக்ஸ்டைல்சானது நிலத்தில் அழுக விடப்பட்டால், நிலத்தை குளிர்வித்தும் நிலத்தினை அதிகம் வளப்படுத்தவும் சாத்தியமாக்கும். இது போன்ற முறைகள் ஆஸ்திரேலியாவின் [18] மற்றும் சஹாராவின் பகுதிகளில் வறட்சியை மாற்றி கங்கை கழிமுகப்பகுதியின் வளத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படலாம்.[சான்று தேவை]
சணலின் பலதரப்பட்ட உப-பொருட்கள் அழகு பொருட்கள், மருந்து, நிறக்குழம்பிகள் மற்றும் பல பொருட்களில் பயன்படலாம்.
சணலுக்கு ஒரு தெளிவான வறண்ட மண்ணும் நிலைத்த தண்ணீரும் தேவை. வளரும் சணலுக்கு பொருத்தமான பருவச் சூழலை (மிதமான தட்பவெப்ப மற்றும் ஈரப்பதமுள்ள தட்பவெப்ப சூழல்) மழைக்கால பருவச் சூழல் பருவக் காலங்களில் ஏற்படுத்துகிறது. வெப்ப அளவுகள் 20˚ C லிருந்து 40˚ C ஆகவும் 70%–80% தொடர்புடைய ஈரப்பதம் வெற்றிகரமான பயிர் இடுதலுக்குச் சாதகமாக உள்ளது. சணலுக்கு 5–8 செமீ வாரந்திர மழையளவும் விதைக்கும் போது அதிகமான மழையளவும் தேவைப்படும்.
பல வரலாற்று ஆவணங்கள் (1590 ஆம் ஆண்டில் அபுல் பசல் எழுதிய அயினி அக்பரி உட்பட) ஏழை இந்திய கிராமவாசிகள் சணலினால் செய்த ஆடைகளை அணிந்தனர் என்றது. எளிமையான கைத்தறிகள் மற்றும் கை ராட்டை சக்கரங்கள் நெசவாளர்களால் பயன்படுத்தப்படும். அவை பருத்தி இழைகளையும் கூட நெய்யப் பயன்படுத்தப்படுகின்றன. வரலாறும் கூட இந்தியர்கள், குறிப்பாக வங்காளிகள், வெள்ளைச் சணலிலிருந்து செய்யப்பட்ட கயிறுகள் மற்றும் இறுக்கமான நூல்களை பழங்காலத்திலிருந்தே வீட்டு மற்றும் இதரப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தினர் என்று கூறுகிறது.
டோஸா சணல் (கோர்கூரஸ் ஓலிடோரியூஸ் ) என்பதொரு அரேபிய வகையாகும். அதன் இலைகளுக்கு மிகப் பிரபலமானது. இலைகள் ஒரு சில அரேபிய நாடுகளில் பிரபலமான மூலோகிய என்ற பெயருடைய முசிலாஜினஸ் போதெர்ப் எனும் உணவுப் பொருளில் ஓர் உள்ளீடாக (ஒரு நிச்சயமற்ற சொல்லிலக்கணம்) பயன்படுத்தப்படுகின்றன. ஹீப்ரூ விவிலியத்தின் 'தி புக் ஆஃப் ஜாப்' இந்த தாவர போதெர்பை ஜூஸ் மால்லோ எனக் குறிப்பிடுகிறது.
டோஸா சணல் மென்மைமையானது, பட்டு போன்றது, மேலும் வெள்ளைச் சணலை விட வலுவானது. டோஸா சணல் ஆச்சரியப்படும் வகையில் கங்கை கழிமுகப்பகுதியின் பருவச் சூழலில் நல்ல வளமையுடனிருந்தது. வெள்ளைச் சணலுடன் டோஸா சணலும் கூட வங்காள மண்ணில் பயிரிடப்படுகிறது, அங்கு அது 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து பாட் என அறியப்படுகிறது. தற்போது வங்காளப் பகுதியே (மேற்கு வங்கம், இந்தியா மற்றும் வங்காள தேசம்) உலகிலேயே அதிகமான டோஸா சணல் வகையை உற்பத்திச் செய்வதாகும்.
பல நூற்றாண்டுகளுக்கு சணல் வங்காள தேசத்தின் முழு தென் மேற்கு பகுதி மற்றும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளின் பண்பாட்டில் இனைந்தப் பகுதியாகும். பிரித்தானிய ஆட்சியின் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் போது, வங்காளத்தின் கச்சா சணல் இழையின் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன, அங்கு டண்டீயில் குவிந்துள்ள ஆலைகளில் பதப்படுத்தப்பட்டன. துவக்கத்தில் அதன் கட்டமைப்பின் காரணமாக அந்நகரத்தில் திமிங்கிலத்தின் எண்ணெயினால் பதப்படுத்தப்படலாம் என்று கண்டறியப்படும் வரை அது கைகளால் மட்டுமே பதப்படுத்தப்பட்டது. அந்த எண்ணெய் கொண்டு இயந்திரத்தாலும் பதப்படுத்தப்பட்டது.[13] தொழில் செழிப்படைந்த போது ("சணல் நெசவாளர்" 1901 ஆம் ஆண்டு இங்கிலாந்து மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது அங்கீகரிக்கப்பட்ட வணிகமாகும்) ஆனால் இந்த வணிகம் 1970 ஆம் ஆண்டுகளில் பெரியளவில் செயற்கை இழைகளின் தோற்றத்தினால் நின்று போனது.
டண்டியிலிருந்த மார்க்ரேட் டானலி எனும் சணல் ஆலை முதலாளி 1880 ஆம் ஆண்டுகளில் வங்காளத்தில் முதல் சணல் ஆலையை ஏற்படுத்தினார். 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் நைலான் மற்றும் பாலிதீன் அரிதாகப் பயன்படுத்தப்பட்டப்போது ஐக்கிய பாகிஸ்தானின் முதன்மை அந்நியச் செலாவணி மூலதாரமாக இருந்தது சணல் ஏற்றுமதியேயாகும்; அது கிழக்கு வங்காளத்தில் (தற்போது வங்காள தேசம்) விளைந்ததை அடிப்படையாகக் கொண்டது. சணல் "வங்காளத்தின் தங்க இழை" என்றழைக்கப்படுகிறது. இருப்பினும், சணலுக்கு மாற்றாக பாலீதீன் மற்றும் இதர செயற்கை இழைகள் அதிகரித்து சந்தையை கைப்பற்றின; சணல் தொழில் பெருமளவில் வீழ்ச்சியையே கண்டது.
1980 ஆம் ஆண்டுகளின் சில வருடங்களில் வங்காள தேசத்தின் விவசாயிகள் அவர்களது சணற் பயிர்களை கூடுதல் விலை பெறப்படாதப் போது எரித்தனர். பல சணல் ஏற்றுமதியாளர்கள் சணலிலிருந்து இதரப் பொருட்களுக்கு மாறினர். சணல்-தொடர்பான நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்படுவதற்கு தூண்டப்பட்டன, மாற்றப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன. தேவையில் நீண்ட நாள் குறைவானது உலகின் பெரிய சணல் ஆலையை (ஆதாம்ஜி சணல் ஆலை) மூடப்பட வற்புறுத்தியது. தொழிலதிபர் யாஹ்யா பவன் முன்பு உடைமைக் கொண்டிருந்த வங்காள தேசத்தின் இரண்டாம் பெரிய ஆலையான லடீஃப் பாவனி சணல் ஆலைகளை அரசு தன் வசம் கொண்டது. இருப்பினும், வங்காள தேசத்தின் விவசாயிகள் சணல் பயிரிடுவதை முற்றிலும் நிறுத்தவில்லை; முக்கிய காரணம் உள்ளூர் சந்தைகளின் தேவை. 2004–2009 இடையில் சணல் சந்தை மீண்டது; கச்சா சணலின் விலை 200% ற்கும் அதிகமாக அதிகரித்தது.
சணல் பல வேறுபட்ட தொழில்களின் ஊடே நுழைந்துள்ளது - எங்கெல்லாம் இயற்கை இழைகள் படிப்படியாகச் சிறந்த மாற்றாக முடியுமோ அங்கெல்லாம் நுழைந்துள்ளது. இத்தகைய தொழில்களில் காகிதம்,செல்லுலாயிட் பொருட்கள் (படச் சுருள்), நூற்கப்படாத ஜவுளிகள், கலப்புக்கள் (செயற்கை-மரம்) மற்றும் நிலத்தடித்துணிகள் (ஜியோடெக்ஸ்டைல்ஸ்) ஆகியவை உள்ளடங்கும்.
2006 ஆம் ஆண்டு டிசம்பரில் ஐக்கிய நாட்டு சபையின் பொதுச் சபை 2009 ஆம் ஆண்டை இயற்கை இழைகளின் சர்வதேச ஆண்டாக அறிவித்தது. அவ்வாறு சணல் மற்றும் இதர இயற்கை இழைகளின் வாழ்வை உயர்த்த வேண்டி செய்தது.
சணல் மழை சார்ந்த பயிர்; சிறிதளவே இரசாயனம் அல்லது பூச்சிகொல்லி மருந்து தேவைப்படுவதாகும். இதன் உற்பத்தி வங்காள தேசம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் குவிந்துள்ளது.
சணல் இழை சணற் செடியின் தண்டு மற்றும் நாடாப்பகுதியிலிருந்து கிடைப்பதாகும். இழைகள், முதலில் நீரில் நனைத்து மிருதுவாக்கப்படுகின்றன. மிருதுவாக்கும் முறைகளில் சணல் தண்டுகளை சேர்த்து கட்டாகக் கட்டியும் ஓடுகின்ற நீரில் கீழாக அமிழ்த்தி வைப்பதும் அடங்கியுள்ளன. இரு விதமான மிருதுவாக்கும் முறைகள் உள்ளன; அவை தண்டு மற்றும் நாடா ஆகியனவாகும். மிருதுவாக்கும் பணி முடிந்தப் பிறகு உரித்தல் துவங்குகிறது. பெண்களும் சிறார்களும் இப்பணியைச் செய்கின்றனர். உரிக்கும் போது, இழையல்லாத கழிவுகள் அகற்றப்படுகின்றன, பின்னர் பணியாளர்கள் சணற் தண்டிலிருந்து இழைகளைத் தோண்டி சேகரிக்கின்றனர்.[12] இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் உள்ளூர் சணல்களை அதிகம் வாங்குகின்றனர். அதே சமயம் பிரிட்டன், இசுப்பானியா, ஐவரி கோஸ்ட், செருமனி மற்றும் பிரேசில் ஆகியவை வங்காளத்திலிருந்து கச்சா சணலை இறக்குமதி செய்கின்றனர். வங்காள தேசம் உலகின் பெரிய சணல் உற்பத்தி நாடாகும். அது 5.5 மில்லியன் பேல்கள் (1 பேல் 180 கிலோகிராமுக்குச் சமம்) சணலை ஒவ்வோர் ஆண்டும் உற்பத்திச் செய்கிறது.
உயர்ந்த பத்து சணல் உற்பத்தியாளர்கள் — 11 ஜூன் 2008 | ||||
---|---|---|---|---|
நாடு | உற்பத்தி (டன்களில்) | அடிக்குறிப்பு | ||
இந்தியா | 2140000 | எஃப் | ||
வங்காளதேசம் | 800000 | எஃப் | ||
சீனா | 99000 | |||
ஐவரி கோஸ்ட் | 40000 | எஃப் | ||
தாய்லாந்து | 31000 | எஃப் | ||
மியான்மர் | 30000 | எஃப் | ||
பிரேசில் | 26711 | |||
உஸ்பெகிஸ்தான் | 20000 | எஃப் | ||
நேபாளம் | 16775 | |||
வியட்நாம் | 11000 | எஃப் | ||
[37]உலகம் | 3225551 | எ | ||
No symbol = அதிகாரபூர்வ புள்ளிவிவரம், F = FAO மதிப்பீடு, A = மொத்தம் (அதிகாரபூர்வ; அரை-அதிகாரபூர்வ அல்லது மதிப்பீடுகள்); ஆதாரம்: ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு: பொருளாதாரம் மற்றும் சமூகத் துறை: புள்ளியியல் பிரிவு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.