கோட்டாறு மறைமாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
கோட்டாறு மறைமாவட்டம் (இலத்தீன்: Kottaren(sis)) என்பது கோட்டாறு புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் உட்பட்ட கத்தோலிக்க ஆட்சி பகுதியாகும். இது கோட்டாறு, குளச்சல், ஆலஞ்சி, முட்டம், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மறைவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.மே 20, 1930ம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து தமிழ் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டமாக அப்போதைய திருத்தந்தை பதினொன்றாம் பயசு அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் ஆயராக மேதகு ஆயர் லாரன்சு பெரைரா அவர்கள் பணிபுரிந்தார்கள். இதன் தற்போதைய ஆயர் மேதகு. நசரேன் சூசை ஆவார் +919442365305ம். இது உருவாகும் போது சுமார் 96,000 கத்தோலிக்க கிறித்தவர்கள் இம் மறைமாவட்டத்தில் வசித்து வந்தார்கள்.
கோட்டாறு மறைமாவட்டம் Dioecesis Kottarensis கோட்டாறு மறைமாவட்டம் | |
---|---|
புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயம், இம்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பெருநகரம் | மதுரை |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 1,665 km2 (643 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 1,720,250 477,174 (27.7%) |
பங்குதளங்கள் | 162 |
விவரம் | |
திருச்சபை | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
உருவாக்கம் | 1930 |
கதீட்ரல் | புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயம் |
பாதுகாவலர் | புனித பிரான்சிஸ் சவேரியார் |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
ஆயர் | மேதகு நசரேன் சூசை |