கேல் ரத்னா விருது
இந்தியக் குடியரசில் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது / From Wikipedia, the free encyclopedia
கேல் ரத்னா விருது (அதிகாரப்பூர்வமாக: மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது) என்பது இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருது நரேந்திர மோடி அரசால் 2021 ஆம் ஆண்டு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் விருது | |
பகுப்பு | விளையாட்டு (தனிநபர்/ குழு) | |
நிறுவியது | 1991 - 1992 | |
முதலில் வழங்கப்பட்டது | 1991 - 1992 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
நிதிப் பரிசு | ₹25 இலட்சம் (US$31,000) | |
விவரம் | இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருது | |
முதல் வெற்றியாளர்(கள்) | விசுவநாதன் ஆனந்த் | |
கடைசி வெற்றியாளர்(கள்) | ||
விருது தரவரிசை | ||
← மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா → அருச்சுனா விருது |
இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். இவ்விருது ஓர் பதக்கம், அங்கீகார சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டது. 2004-05 ஆண்டில் கடைசியாக வழங்கப்பட்டபோது, இது இந்திய ரூபாய் 500,000/- மதிப்பு கொண்டதாக இருந்தது. பின்னர் ₹750,000க்கு கூட்டப்பட்டது.[1]
1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள அருச்சுனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.