குரு தேக் பகதூர்
From Wikipedia, the free encyclopedia
குரு தேக் பகதூர் (Guru Tegh Bahadur) (பஞ்சாபி: ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ). (ஏப்ரல் 1, 1621 - நவம்பர் 24, 1675) என்றறியும் இவர், பத்து சீக்கிய குருக்களில் (தீர்க்கதரிசிகள்) சீக்கிய மத நம்பிக்கையின் ஒன்பதாம் நானக் குருவாவார். சீக்கிய குருக்களில் முதல் குருவான குரு நானக் என்பவரின் ஆவி, இவர்மீது தொடர்ந்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும், ஆதி கிரந்த் எனப்படும் குரு கிரந்த் சாகிப் எனும் சீக்கியர்களின் புனித நூலில், இவரது 115 கவிதை நடையிலான பாசுரங்களின் (இறைப் பாடல்கள்) உரை இடம்பெற்றுள்ளது.[1]
விரைவான உண்மைகள் குரு தேக் பகதூர் Guru Tegh Bahadur ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ, பிறப்பு ...
குரு தேக் பகதூர் Guru Tegh Bahadur ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ | |
---|---|
பிறப்பு | தயக் மால் 1 April 1621 (1621-04) அம்ரித்சர், இந்தியா |
இறப்பு | 24 November 1675 (1675-11-25) (அகவை 54) தில்லி, இந்தியா |
தேசியம் | அகண்ட இந்தியா |
மற்ற பெயர்கள் | இந்திய கேடயம், வாள் மிகைத்தவன், ஒன்பதாவது குரு, உண்மையான அரசன் |
செயற்பாட்டுக் காலம் | 1664–1675 |
அறியப்படுவது | ஆன்மீக பங்களிப்புகளில் குரு கிரந்த் சாகிப், வீர மரணம் காஷ்மீரி இந்துக்கள் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்தவர் மற்றும் தன்னை இஸ்லாமியமாக மாற்ற மறுத்தவர், அனந்தபூர் சாஹிப், பாட்டியாலா நிறுவனர் |
முன்னிருந்தவர் | குரு அர் கிருசன் |
பின்வந்தவர் | குரு கோவிந்த் சிங் |
வாழ்க்கைத் துணை | மாதா குஜ்ரி |
பிள்ளைகள் | குரு கோவிந்த் சிங் |
மூடு
இவர் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆணையால் 24 நவம்பர் 1675 அன்று கொல்லப்பட்டார்.[2]