குசானப் பேரரசு
நடு மற்றும் தெற்கு ஆசியப் பேரரசு (பொ. ஊ. 30-375) / From Wikipedia, the free encyclopedia
குசானப் பேரரசு (ஆங்கிலம்: Kushan Empire; பண்டைக் கிரேக்கம்: Βασιλεία Κοσσανῶν; பாக்திரியம்: Κοϸανο, கொசானோ; சமக்கிருதம்: कुषाणः, கு-சா-னா; பிராமி எழுத்துமுறை: , கு-சா-னா; பௌத்த சமக்கிருதம்: குசான-வம்சம்; பார்த்தியம்: 𐭊𐭅𐭔𐭍 𐭇𐭔𐭕𐭓, Kušan-xšaθr; மரபுவழிச் சீனம்: 貴霜; பின்யின்: குயிசுவாங்[20]) என்பது பல சமய நம்பிக்கைகளை உடைய மக்களை ஒன்றாகக் கொண்டிருந்த ஒரு பேரரசு ஆகும். இது முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாக்திரிய நிலப்பரப்புகளில் உயேசி பழங்குடியினத்தவரால் உருவாக்கப்பட்டது. தற்போதைய உசுபெக்கிசுத்தான், ஆப்கானித்தான், பாக்கித்தான், மற்றும் வட இந்தியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில் இது விரிவடைந்தது.[21][22][23] இது சாகேதம் மற்றும் சாரநாத் ஆகியவற்றுடன் வாரணாசிக்கு அருகிலான நிலப்பரப்பு வரையிலும் கூட விரிவடைந்திருந்தது. குசானப் பேரரசர் கனிஷ்கரின் சகாப்தத்திற்குக் காலமிடப்பட்ட கல்வெட்டுகள் வாரணாசியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[note 4]
குசானப் பேரரசு | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
30–375 | |||||||||||||||||||||||||||||
தலைநகரம் | பெசாவர் (புருசபுரம்) தக்சசீலா மதுரா | ||||||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | கொயினே கிரேக்கம் (அண். 127 வரை அலுவல் மொழி)[note 2] பாக்திரியம்[note 2] (அண். 127 முதல் அலுவல் மொழி)[note 3] காந்தாரப் பிராகிருதம்[13] கலப்பு சமசுகிருதம்[13] | ||||||||||||||||||||||||||||
சமயம் | பௌத்தம்[14] இந்து சமயம்[15] சரதுசம்[16] | ||||||||||||||||||||||||||||
மக்கள் | குசானர்கள் (உயேசி) | ||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | முடியரசு | ||||||||||||||||||||||||||||
பேரரசர் | |||||||||||||||||||||||||||||
• 30–80 | குஜுலா கத்பிசசு | ||||||||||||||||||||||||||||
• 350–375 | கிபுனாடா | ||||||||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரிய பண்டைக் காலம் | ||||||||||||||||||||||||||||
• குசலா கத்பிசசு உயேசி பழங்குடியினங்களை ஒரு கூட்டமைப்பாக இணைக்கிறார் | 30 | ||||||||||||||||||||||||||||
375 | |||||||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||||||
70ஆம் ஆண்டு மதிப்பீடு[18] | 2,000,000 km2 (770,000 sq mi) | ||||||||||||||||||||||||||||
200ஆம் ஆண்டு மதிப்பீடு[19] | 2,500,000 km2 (970,000 sq mi) | ||||||||||||||||||||||||||||
நாணயம் | குசான திரச்மா | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் |
குசானர்கள் உயேசி கூட்டமைப்பின் ஐந்து பிரிவுகளில் ஒருவராக அநேகமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[27][28] உயேசி கூட்டமைப்பு என்பது அநேகமாக தொச்சாரியப் பூர்வீகத்தைக் கொண்ட இந்தோ-ஐரோப்பிய நாடோடி மக்களின் கூட்டமைப்பு ஆகும்.[29][30][31][32][33] வடமேற்கு சீனாவின் சிஞ்சியாங் மற்றும் கான்சு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து பண்டைக் கால பாக்திரியாவில் இவர்கள் குடியமர்ந்தனர்.[28] இந்த அரசமரபைத் தோற்றுவித்த குஜுலா கத்பிசசு கிரேக்கப் பண்பாட்டு யோசனைகளையும், உருவ அச்சசிடுதலையும் கிரேக்க பாக்திரியா பேரரசின் பாரம்பரியத்தைப் பின்பற்றிப் பயன்படுத்தினார். இந்து சமயத்தின் சைவப் பிரிவை சேர்ந்தவராக இவர் இருந்தார்.[34] இரண்டு பிந்தைய குசான மன்னர்களான வீமா காட்பீசஸ் மற்றும் இரண்டாம் வாசுதேவன் ஆகியோரும் இந்து சமயத்திற்குப் புரவலர்களாக விளங்கினர். பொதுவாக குசானர்கள் பௌத்தத்திற்கும் சிறந்த புரவலர்களாக விளங்கினர். பேரரசர் கனிஷ்கரில் தொடங்கி சரதுசத்தின் காரணிகளையும் தங்களது ஆட்சியில் பயன்படுத்தினர்.[35] நடு ஆசியா மற்றும் சீனாவுக்குப் பௌத்தம் பரவியதில் இவர்கள் ஒரு முக்கியப் பங்கை ஆற்றினர். ஒப்பீட்டளவில் 200 ஆண்டு கால அமைதியான காலத்தைத் தொடங்கி வைத்தனர். இது சில நேரங்களில் "பாக்ஸ் குசானா" (குசான அமைதி) என்று குறிப்பிடப்படுகிறது.[36]
தொடக்கத்தில் நிர்வாகப் பயன்பாடுகளுக்காகக் குசானர்கள் அநேகமாகக் கிரேக்க மொழியைப் பயன்படுத்தினர் என்று கருதப்படுகிறது. ஆனால் பிறகு பாக்திரிய மொழியைப் பயன்படுத்தத் தொடங்கினர். வடக்கே காரகோரம் மலைகளைத் தாண்டி தனது இராணுவங்களை கனிஷ்கர் அனுப்பினார். காந்தார தேசத்திலிருந்து சீனாவுக்குச் சென்ற ஒரு நேரடிச் சாலையானது குசானர்களின் கட்டுப்பாட்டில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்தது. காரகோரத்தின் வழியாகப் பயணத்தை ஊக்குவித்தது. சீனாவுக்கு மகாயான பௌத்தத்தின் பரவலை இது எளிதாக்கியது. உரோமைப் பேரரசு, சசானியப் பாரசீகம், அக்சும் பேரரசு மற்றும் சீனாவின் ஆன் அரசமரபு ஆகியவற்றுடன் தூதரக உறவுகளைக் குசான அரசமரபானது கொண்டிருந்தது. உரோமைப் பேரரசு மற்றும் சீனாவுக்கு இடையிலான வணிக உறவுகளின் மையத்தில் குசானப் பேரரசு அமைந்திருந்தது. அலைன் தேனியலோ என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி, "ஒரு காலத்திற்கு, முதன்மையான நாகரிங்களின் மையப் பகுதியாக குசானப் பேரரசு திகழ்ந்தது".[37] பெரும்பாலான தத்துவம், கலை மற்றும் அறிவியலானது இதன் எல்லைகளுக்குள் உருவாக்கப்பட்ட அதே நேரத்தில், பேரரசின் வரலாறு குறித்து தற்காலத்தில் கிடைக்கப் பெறும் ஒரே நூல் பதிவுகளானவை கல்வெட்டுக்கள் மற்றும் பிற மொழிகளில், குறிப்பாக சீன மொழியில், உள்ள நூல்களில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.[38]
குசானப் பேரரசானது பொ. ஊ. 3ஆம் நூற்றாண்டில் பகுதியளவு-சுதந்திரமுடைய இராச்சியங்களாகச் சிதறுண்டது. இவை மேற்கிலிருந்து படையெடுத்து வந்த சாசானியர்களிடம் வீழ்ந்தன. சோக்தியானா, பாக்திரியா மற்றும் காந்தாரம் ஆகிய பகுதிகளில் குசான-சாசானிய இராச்சியத்தை இவர்கள் நிறுவினர். 4ஆம் நூற்றாண்டில் இந்திய அரசமரபான குப்தர்கள் கிழக்கில் இருந்து அழுத்தம் கொடுத்தனர். கடைசி குசான மற்றும் குசான-சாசானிய இராச்சியங்கள் இறுதியாக வடக்கிலிருந்து வந்த கிடாரைட்டு, பிறகு ஹெப்தலைட்டு படையெடுப்பாளர்களால் திணறடிக்கப்பட்டன.[17]