ஏ-9 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
ஏ-9 நெடுஞ்சாலை (A9 Highway) என்பது இலங்கையின் மத்திய மாகாணத் தலைநகரான கண்டியையும் வட மாகாணத் தலைநகர் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் 325 கிலோமீட்டர் (202 மைல்) தூர நெடுஞ்சாலை ஆகும். இது பொதுவாக கண்டி வீதி என யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியில் யாழ் சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நெடுஞ்சாலை கண்டியில் இருந்து மாத்தளை, தம்புள்ளை, மிகிந்தலை, இறம்பாவை, மதவாச்சி, வவுனியா, கிளிநொச்சி ஆகிய நகரங்களினூடாக யாழ்ப்பாணத்தை அடைகிறது.
விரைவான உண்மைகள் வழித்தட தகவல்கள், முக்கிய சந்திப்புகள் ...
ஏ-9 நெடுஞ்சாலை | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
ஆசிய நெடுஞ்சாலை AH43 இன் பகுதி | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | கண்டி | |||
வடக்கு முடிவு: | யாழ்ப்பாணம் | |||
அமைவிடம் | ||||
முக்கிய நகரங்கள்: | கண்டி, மாத்தளை, தம்புள்ளை, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
மூடு