![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9c/Vavuniya_City.jpg/640px-Vavuniya_City.jpg&w=640&q=50)
வவுனியா
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளர்ச்சியுடைய நகரமாக அமைந்துள்ளது. ஈழப்போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர். மெனிக்பாம் நலன்புரி நிலையம் இங்கு அமைந்துள்ளது. கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் இன்றைய வவுனியா மாவட்டம் ரஜரட்டையின் ஒரு பகுதியாக இருந்தது. வவுனியா மாவட்டம் பின்னர் வன்னியர் தலைமைகளால் ஆளப்பட்டது, இந்த மாவட்டம் பின்னர் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானிய கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1815 இல் ஆங்கிலேயர்கள் முழுத் தீவின் கட்டுப்பாட்டையும் பெற்றனர். அவர்கள் தீவை மூன்று இன அடிப்படையிலான நிர்வாகக் கட்டமைப்புகளாகப் பிரித்தனர்: கீழ் நாட்டு சிங்களவர்கள், கண்டிய சிங்களவர்கள் மற்றும் தமிழ். அப்போது வன்னி மாவட்டம் என்று அழைக்கப்பட்ட மாவட்டம் தமிழ் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1833 ஆம் ஆண்டில், கோல்ப்ரூக்-கேமரூன் கமிஷனின் பரிந்துரைகளின்படி, இன அடிப்படையிலான நிர்வாக கட்டமைப்புகள் ஐந்து புவியியல் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒற்றை நிர்வாகமாக ஒருங்கிணைக்கப்பட்டன. வன்னி மாவட்டம், யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டத்துடன் இணைந்து புதிய வடக்கு மாகாணத்தை உருவாக்கியது. வன்னி மாவட்டம் பின்னர் முல்லைத்தீவு மாவட்டமாகவும் பின்னர் வவுனியா மாவட்டமாகவும் மாற்றப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த நேரத்தில், வட மாகாணத்தில் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களில் வவுனியாவும் ஒன்றாகும். செப்டம்பர் 1978 இல் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை உருவாக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வவுனியா | |
![]() | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - வவுனியா |
அமைவிடம் | 8.754239°N 80.497971°E / 8.754239; 80.497971 |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 30-120 மீட்டர் மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
அரச அதிபர் | திரு.பந்துல ஹரிச்சந்திரா |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 43000 - +94-24, - NP |
வவுனியா மாவட்டத்தின் மேற்பரப்பு நீர்
புவி மேற்பரப்பில் காணப்படும் நீர் வளிமண்டலச் செயற்பாடுகளுடன் இணைந்ததுடன் கண்டங்களின் காலநிலைகளை நிர்ணயிப்பதிலும் ஓர் அடிப்படைக் காரணியாக விளங்குகின்றது. அயன மண்டல நாடான இலங்கையின் நீர்வளங்கள் மழைவீழ்ச்சியில் காணப்படும் பருவகால, இடம்சார்ந்த வேறுபாடுகளினா தீரமானிக்கப்படுகின்றன. புவி மேற்பரப்பில் காணப்படுகின்ற நீரானது மேற்பரப்பு நீர், தரைகீழ்நீர் என வகைப்படுத்தப்படுகின்றது. நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்களில் தேங்கியுள்ள வடிவிலும் ஆறுகள், கங்கைகளில் ஓடும் நீர் வடிவிலும் மேற்பரப்பு நீர் காணப்படுகின்றது. இலங்கையின் மத்திய மலைத்திணிவுகளிலிருந்து 103 ஆறுகள் நாட்டின் பல பாகங்களினூடாக ஆரை வடிவில் பாய்ந்தோடுகின்றன. இலங்கை ஒரு பொருளாதார நாடாக இருப்பதனால் உலர்வலய விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் அவசியமானதாக உள்ளது. இந்த வகையில் இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தியில் நீரானது நேரடியான தாக்கத்தைக் கொண்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மேற்பரப்பு நீர்வளங்களாக குளங்களும் ஆறுகளும் காணப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் வவுனியா மாவட்டத்தில் நீர்த் தேவைகள் குளங்களில் இருந்து பூர்த்தி செய்யப்பட்டது. எனினும் விவசாயத் தேவைக்கான நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காக தோட்டக் கிணறுகள் போன்ற ஆழமான கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றது. இங்குள்ள குளங்களில் பாரிய குளங்கள் ஆண்டு முழுவதும் நீரினைக் கொண்டு காணப்படுகின்றது. எனினும் சிறிய குளங்கள் மாரி காலங்களில் நீரினைக் கொண்டதாகவும் வரண்ட மாதங்களில் வற்றிவிடும் தன்மையும் கொண்டுள்ளது. அந்தவகையில் இம் மாவட்டத்தில் ஒரு பெரிய குளம் உட்பட 22 நடுத்தர குளங்களும், 674 சிறிய நீர்பாசன குளங்களும் அத்துடன் 22 புராதன குளங்களும் காணப்படுகிறது. இங்கு நீர் வளமானது மழைவீழ்ச்சியிலும் வற்றாத ஆறுகளிலும் தங்கியுள்ளது. 674 சிறிய நீர்ப்பாசன திட்டத்தில் 83 கைவிடப்பட்டுள்ளது. உலக வங்கி நிதிஉதவித்திட்டத்தின் கீழ் NEIAP – I மூலம் 103 சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் 01.04.2005 ஆண்டின் இறுதியில் பூரணப்படுத்தப்பட்டது. அத்துடன் 22 குளங்கள் 2004 இல் 10,000 சிறிய குளங்கள் மீளமைப்பு திட்டத்தின் கீழ் மீளமைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்றன.