![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/72/Mihintale-stone_steps.jpg/640px-Mihintale-stone_steps.jpg&w=640&q=50)
மிகிந்தலை
From Wikipedia, the free encyclopedia
மிகிந்தலை (Mihintale, சிங்களம்: මිහින්තලය), இலங்கையில் உள்ள எச்சக்குன்றுகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் மண் உள்ளீர்க்கப்பட்டு, இத்தகைய எச்சக்குன்றுகள் உருவாகின்றன. மகிந்த தேரரின் வருகைக்குப் பின் இந்த எச்சக்குன்றுகள் புண்ணிய இடமாக மாற்றம் பெற்றன. இதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள், புதை பொருட்கள் என்பன இங்கு காணப்படுகின்றன. இவை அனுராதபுரக் காலப்பகுதிக்கு உரியவையாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகிந்தலை ஒரு சரணாலயம் ஆகும். இது அநுராதபுரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் அமைவிடம் வடக்கில் 80 பாகை ஆகவும் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தனிமையான மலைக்குன்றுப் பகுதியாகவும் காணப்படுகின்றது. இதில் மிகிந்தலை மலை, எத்வெகர மலை, ஆனைக்குட்டி மலை மற்றும் ராஜகலலென மலை ஆகிய நான்கு மலைகள் உள்ளடங்கியுள்ளன. ஆயினும், பண்டைய காலத்தில் 'மிஸ்ஸக்க பவ்வ' என்ற பொதுப்பெயரால் இது அழைக்கப்பட்டிருந்தது. இந்த மலை 1,000 அடிகளைவிடக் குறைந்தது. மலையின் அனைத்துப் பகுதிகளிலும் கற்பாறைகள், கற்குன்றுகள் போன்றவை காணப்படுகிண்றன. இந்த மலைத் தொடர்ச்சி வடகிழக்குத் திசையை நோக்கிச் செல்கின்றது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/72/Mihintale-stone_steps.jpg/320px-Mihintale-stone_steps.jpg)