ஆம்பன் புயல்
From Wikipedia, the free encyclopedia
ஆம்பன் புயல் (Cyclone Amphan, /ˈɑːmpʌn/, ஆம்பன் அல்லது உம்பன்) என்பது வங்கக் கடலில் உருவாகிய மிகவும் சக்திவாய்ந்த புயல் ஆகும். இது 2020 ஆம் ஆண்டு வட இந்திய பெருங்கடலில் உருவாகிய மிகப்பெரிய முதல் வெப்பமண்டல புயலாகும். தமிழ் மொழியில், இதன் உச்சரிப்பு உம்பன் என்று அழைக்கப்படுகிறது.[1] வங்கக் கடலில் உருவான இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வந்தபோது, 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி மேலும் நகர்ந்து, 20 மே 2020 அன்று, மதியம் அல்லது மாலையில் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே கடந்து செல்லும் என கணிக்கப்பட்டது. 1999 ஒடிசா புயலுக்கு பின்னர், வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட முதல் சக்திவாய்ந்த புயல் இதுவாகும்.[2][3] கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், மே 21 வரை மீனவர்கள் யாரும், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மைய இயக்குனர் கூறினார்.
Super cyclonic storm (இ.வா.து. அளவு) | |
---|---|
Category 5 (சபிர்-சிம்ப்சன் அளவு) | |
மே 18 அன்று வங்காள விரிகுடாவில் மிகவும் வலுப்பெற்ற நிலையில் உள்ள ஆம்பன் புயல் | |
தொடக்கம் | 16 மே 2020 |
மறைவு | 21 மே 2020 |
உயர் காற்று | 3-நிமிட நீடிப்பு: 240 கிமீ/ம (150 mph) 1-நிமிட நீடிப்பு: 260 கிமீ/ம (160 mph) |
தாழ் அமுக்கம் | 925 hPa (பார்); 27.32 inHg |
இறப்புகள் | 103 மொத்தம் |
சேதம் | >$149.3 million (2020 USD) $ |
பாதிப்புப் பகுதிகள் | இலங்கை, அந்தமான் தீவுகள், மேற்கு வங்காளம், ஒடிசா, வங்காளதேசம் |
2020 வட இந்தியப் பெருங்கடல் புயல் பருவம்-இன் ஒரு பகுதி | |