![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5f/Vishnu_Shiva.jpg/640px-Vishnu_Shiva.jpg&w=640&q=50)
வைகுண்ட சதுர்த்தசி
இந்துக்களின் புனித நாள் / From Wikipedia, the free encyclopedia
வைகுண்ட சதுர்த்தி (Vaikuntha Chaturdashi) என்பது, இந்துக்களின் புனித நாளாகும். இது இந்து நாட்காட்டி மாதமான கார்த்திகையின் (நவம்பர்-டிசம்பர்) வளர்பிறை நிலவு அரைத் திங்களில் (சுக்ல பட்சம்) 14வது சந்திர நாளான சதுர்த்தி அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களுக்கு புனிதமானது. வாரணாசி, ரிசிகேசு, கயை, மகாராட்டிராவில் உள்ள வெவ்வேறு கோவில்களில் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ வழிபடுகிறார்கள்.
விரைவான உண்மைகள் வைகுண்ட சதுர்த்தி, கடைபிடிப்போர் ...
வைகுண்ட சதுர்த்தி | |
---|---|
![]() சிவன் விழ்ணுவிடம் சக்ராயுதத்தை வழங்கும் ஓவியம் | |
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
வகை | இந்து |
அனுசரிப்புகள் | தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு, சிவன் ஆகிய கடவுளர்களுக்கு பிரார்த்தனைகளும், மதச் சடங்குகளும் நடைபெறுகிறது. |
நாள் | சந்திர நாட்காட்டியில் அனுசரிக்கப்படுகிறது |
தொடர்புடையன | கார்த்திகை பூர்ணிமா |
மூடு
சிவாஜி அவரது தாயார் ஜிஜாபாய் ஆகியோரால் அமைத்த வழக்கப்படி, இந்த புனித நாள் மராத்தியர்களால் மகாராட்டிராவில் அனுசரிக்கப்படுகிறது. கவுட சாரஸ்வத் பிராமணர்களால் சற்று வித்தியாசமான வடிவத்தில் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் இது உள்ளது.[1]