வேத மொழி
From Wikipedia, the free encyclopedia
வேதம் எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியாகச் சங்ககாலம் வரையில் நிலவிவந்தது.[2] இதனைத் தமிழ் இலக்கண உரையாசிரியர்கள் ஆரியம் என்றும், வடமொழி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த வேத-மொழி வேதம் எழுதப்பட்ட பொ.ஊ.மு. 1500 ஆண்டைச் சார்ந்தது. இதன் காலம் பலராலும் ஒப்புக்கொண்டுள்ளபடி பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டு. தொல்காப்பியம் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதிய தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியரை ஐந்திரம் நிறைந்தவன் எனக் குறிப்பிடுகிறார். ஐந்திரம் பாணினியின் இலக்கணத்துக்கு முன்னோடியாக இருந்த பல இலக்கண நூல்களில் ஒன்று.
விரைவான உண்மைகள் வேத மொழி, நாடு(கள்) ...
வேத மொழி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா, ஆப்கானித்தான், நேபால் மற்றும் பாக்கித்தான் |
பிராந்தியம் | வடமேற்கு இந்தியத் துணைக்கண்டம் |
இனம் | ஆரியம் |
ஊழி | அண். 1500 - 600 பொது ஊழி |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | – (vsn is proposed)[1][needs update] |
மொழிசார் பட்டியல் | vsn |
qnk Rigvedic | |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |
மூடு