பாணினி
From Wikipedia, the free encyclopedia
பாணினி (Pāṇini) என்பார் சமசுக்கிருத மொழிக்கான இலக்கண நூலான அட்டாத்தியாயியை எழுதியவராவார்.[2][3][4] இவர் சமசுகிருத மொழியியலின் தந்தை எனப்போற்றபடுகிறார்.[5][6][7] இவரது காலம் பொ.ஊ.மு. 520-க்கும் பொ.ஊ.மு. 460-க்கும் இடையே இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.[8][9][note 1][10][11][12][13] இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்கில் உள்ள காந்தாரத்தில் வாழ்ந்ததாக கருதுகின்றனர்.
பாணினி | |
---|---|
காசுமீரில் கிடைத்த 17-ஆம் நூற்றாண்டு காலத்திய பாணினியின் இலக்கண நூல் | |
தாய்மொழியில் பெயர் | சமக்கிருதம்: पाणिनि |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அட்டாத்தியாயி, சமசுகிருத செம்மொழி |
காலம் | பொ.ஊ.மு. 520-க்கும் பொ.ஊ.மு. 460-க்கும் இடையே |
பகுதி | காந்தாரம் |
முக்கிய ஆர்வங்கள் | சமசுகிருத இலக்கணம் & சமசுகிருத மொழியியல் |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
| |
பழங்காலத்தின் மிகப் பெரிய மொழியியலாளர்
பாணினி...பழங்காலத்தின் மிகப்பெரிய மொழியியலாளர் ஆவார், மேலும் அவ்வாறு கருதப்படுவதற்கு தகுதியானவர்
—செ எப் சிதால், செருமானிய சமசுகிருத இலக்கணப் பேராராசிரியர்[1]
சமசுக்கிருத இலக்கணம் மற்றும் மொழியியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ள இவர், அம்மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவியல் அடைப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளார்.[14][15][16]