![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/Veerappa_Moily_BNC.jpg/640px-Veerappa_Moily_BNC.jpg&w=640&q=50)
வீரப்ப மொய்லி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மூடுபித்ரி வீரப்ப மொய்லி (Moodbidri Veerappa Moily, கன்னடம்: ಮೂಡಬಿದ್ರಿ ವೀರಪ್ಪ ಮೊಯ್ಲಿ) (பிறப்பு: சனவரி 12, 1940) கருநாடக மாநில அரசியல்வாதியும் நடுவண் அரசின் முன்னாள் வணிக நிறுவனங்கள் விவகாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார்.[1] 2009ஆம் ஆண்டில் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வேறுபாட்டில் வென்றார்.[2]
வீரப்ப மொய்லி ವೀರಪ್ಪ ಮೊಯ್ಲಿ | |
---|---|
![]() | |
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு & உருக்குத் துறை அமைச்சர் | |
பதவியில் 28 அக்டோபர் 2012 – 26 மே 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | முரளி தியோரா |
பின்னவர் | தர்மேந்திர பிரதான் |
வணிக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் | |
பதவியில் சூலை 13, 2011 – அக்டோபர் 28, 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | அன்சுராசு பரத்வாச் |
பின்னவர் | சச்சின் பைலட் |
மின்சாரத்துறை அமைச்சர் | |
பதவியில் சூலை 31, 2012 – அக்டோபர் 28, 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | சுசீல்குமார் சிண்டே |
பின்னவர் | ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா |
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் | |
பதவியில் 28 மே 2009 – சூலை 12, 2011 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | அன்சுராசு பரத்வாச் |
பின்னவர் | சல்மான் குர்சித் |
கருநாடக முதலமைச்சர் | |
பதவியில் 19 நவம்பர் 1992 – 11 திசம்பர் 1994 | |
ஆளுநர் | குர்செத் ஆலம் கான் |
முன்னையவர் | எஸ். பங்காரப்பா |
பின்னவர் | எச். டி. தேவ கௌடா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 சனவரி 1940 (1940-01-12) (அகவை 84) மூடுபித்ரி, பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மாலதி மொய்லி |
பிள்ளைகள் | 3 மகள்கள் 1 மகன் |
முன்னாள் கல்லூரி | பல்கலைக்கழகக் கல்லூரி, மங்களூரு பெங்களூரு பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | அலுவலக வலைத்தளம் |
மொய்லி துளு இனத்தைச் சேர்ந்த முதல் கருநாடக முதலமைச்சராக நவம்பர் 19, 1992 முதல் திசம்பர் 11, 1994 வரை பணியாற்றி உள்ளார். உடுப்பி மாவட்டத்தின் கர்கலா தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ஆந்திர அரசியலை கண்காணித்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நெருங்கிய ஆலோசகராகவும் கருதப்படுகிறார்.