மன்மோகன் சிங்
13வது இந்திய பிரதமர் / From Wikipedia, the free encyclopedia
மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார்.
மன்மோகன் சிங் ਮਨਮੋਹਨ ਸਿੰਘ | |
---|---|
13வது இந்தியப் பிரதமர் | |
பதவியில் 22 மே 2004 – 26 மே 2014 | |
குடியரசுத் தலைவர் | அப்துல் கலாம் பிரதீபா பாட்டீல் பிரணாப் முகர்ஜி |
முன்னையவர் | அடல் பிகாரி வாச்பாய் |
பின்னவர் | நரேந்திர மோதி |
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் | |
பதவியில் 6 நவம்பர் 2005 – 24 அக்டோபர்2006 | |
முன்னையவர் | நட்வர் சிங் |
பின்னவர் | பிரனாப் முகர்ஜி |
இந்தியாவின் நிதியமைச்சர் | |
பதவியில் 30 நவம்பர் 2008 – 24 சனவரி 2009 | |
முன்னையவர் | பழனியப்பன் சிதம்பரம் |
பின்னவர் | பிரனாப் முகர்ஜி |
பதவியில் 21 சூன் 1991 – 16 மே 1996 | |
பிரதமர் | நரசிம்ம ராவ் |
முன்னையவர் | மது தண்டவதே |
பின்னவர் | ஜஸ்வந்த் சிங் |
இந்தியத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் | |
பதவியில் 15 சனவரி 1985 – 31 ஆகத்து 1987 | |
பிரதமர் | ராஜீவ் காந்தி |
முன்னையவர் | நரசிம்ம ராவ் |
பின்னவர் | சிவ் சங்கர் |
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் | |
பதவியில் 15 செப்டம்பர் 1982 – 15 சனவரி 1985 | |
முன்னையவர் | இந்திரபிரசாத் கோர்தன்பாய் பட்டேல் |
பின்னவர் | அமிதவ் கோசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 செப்டம்பர் 1932 (1932-09-26) (அகவை 91) கா, பஞ்சாப்,பிரித்தானிய ராஜ் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1982–தற்போது வரை) |
துணைவர் | குர்சகாரன் கெளர் (திருமணம். 1958) |
பிள்ளைகள் | உபிந்தர் சிங் தமன் சிங் அம்ரித் சிங் |
வாழிடம்(s) | 7 ரேஸ் கோர்ஸ் வீதி, புது தில்லி, இந்தியா (official) குவாகாத்தி (private) |
முன்னாள் கல்லூரி | பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் செயின்ட் ஜான் கல்லூரி, கேம்பிரிச்சு நியூபீல்ட் கல்லூரி, ஆக்சுபோர்டு |
வேலை | பொருளாதார நிபுனர் குடிமைப் பணி சமூக சேவையாளர் பேராசிரியர் கல்வியாளர் |
இணையத்தளம் | மன்மோகன் சிங் |
1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 மற்றும் 2007ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.