![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/95/The_Secretary_of_Department_of_Biotechnology%252C_Dr._Renu_Swarup_addressing_at_the_inauguration_of_the_Curtain_Raiser_Program_on_the_4th_India_International_Science_Festival%252C_at_Tata_Institute_of_Fundamental_Research%252C_in_Mumbai.JPG/640px-thumbnail.jpg&w=640&q=50)
ரேணு சுவரூப்பு
இந்திய அறிவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
ரேணு சுவரூப்பு (Renu Swarup) என்பவர் இந்திய அரசுச் செயலாளராக உள்ளார். இவர் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிர்தொழில்நுட்பவியல் (டிபிடி) தலைவராக உள்ளார்.[1] [2] இந்தியாவின் உயிர்தொழில்நுட்பவியல் திட்டத்தினையும் செயல்பாட்டினையும் முன்னெடுப்பதில் இவர் தீவிரமாகப் பங்களித்துள்ளார்.[3][4] இந்தியாவின் மிகப்பெரிய நுண்ணுயிர் வள மையமான நுண்ணுயிரி வளர்ப்பு சேகரிப்பை நிறுவிய பெருமைக்குரியவர்.[5]
ரேணு சுவரூப்பு | |
---|---|
![]() | |
செயலர், உயிர்தொழில்நுட்பவியல் துறை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஏப்ரல் 10, 2018 | |
முன்னையவர் | அசுதோடு சர்மா |
தலைவர், உயிர்தொழில்நுட்பவியல் தொழில ஆராய்ச்சி உதவி குழுமம் | |
முன்னையவர் | கே. விஜய்ராகவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
இந்தியாவில் நுண்ணுயிரி பன்முகத்தன்மை ஆராய்ச்சிக்கு இவரின் பங்களிப்பு முக்கியமானது. உயிரியல் பல்வகைமை சட்டம், 2002இன் விதிகளை எளிதாக்கியதற்காகப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிரிச் சிற்றினத்திற்கு நாட்ரியால்பா சுவரூபியா என இவரது நினைவாகத் தேசிய உயிரணு அறிவியல் மையத்தால் சிற்றினப் பெயரிடப்பட்டது.[6][5]
தனது தற்போதைய பணியுடன், கூடுதலாக உயிரிதொழில்நுட்ப தொழிலக ஆராய்ச்சி உதவி குழுமத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறை நிறுவனமான செயல்படும் இந்நிறுவனம் உயிரிதொழில்நுட்ப துறையில் தொழில் வாய்ப்புகள், தொடக்கநிலை வணிகம், சிறு-குறு தொழில் தொடங்க உதவுகிறது.[7][8]