From Wikipedia, the free encyclopedia
உயிரியற் பல்வகைமை சட்டம், 2002 (Biological Diversity Act, 2002) என்பது இந்தியாவின் உயிரியற் பல்வகைமை பாதுகாப்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தால் செயல்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும். இச்சட்டம் பாரம்பரிய உயிரியல் வளங்கள் மற்றும் அறிவின் பயன்பாட்டினால் எழும் நன்மைகளைச் சமமாகப் பகிர்வதற்கான வழிமுறையை வழங்குகிறது. உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டின் (சிபிடி) கீழ் உள்ள கடமைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டது, ஏனெனில் இந்தியா மாநாட்டின் அங்கமாக உள்ளது.
உயிரியற் பல்வகைமை சட்டம், 2002 | |
---|---|
இந்தியாவின் உயிரியற் பல்வகைமை பாதுகாப்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தால் செயல்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும். | |
சான்று | Act No. 18 of 2003 |
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
சம்மதிக்கப்பட்ட தேதி | 5 பிப்ரவரி 2003 |
2002 ஆம் ஆண்டில் இந்தியா, உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டின் (சிபிடி) கீழ் உள்ள கடமைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டது. [1] [2]
சட்டத்தின் பிரிவு 2 (பி)இன் கீழ் பல்லுயிர் வரையறுக்கப்பட்டுள்ளது, "அனைத்து மூலங்களிலிருந்தும், அவை அங்கமாக இருக்கும் சுற்றுச்சூழல் வளாகங்களிலிருந்தும் வாழும் உயிரினங்களிடையே உள்ள மாறுபாடு, மேலும் இனங்கள் அல்லது இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இடையில் பன்முகத்தன்மையை உள்ளடக்கியது". இந்தச் சட்டம், உயிரியல் வளங்களை "தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் அல்லது அதன் பாகங்கள், அவற்றின் மரபணு பொருள் மற்றும் துணைப் பொருட்கள் (மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளைத் தவிர்த்து) உண்மையான அல்லது சாத்தியமான பயன்பாடு அல்லது மதிப்புடன் வரையறுக்கிறது. இதில் மனித மரபணுப் பொருள்களைக் கொண்டிருக்கவில்லை." [3]
தேசிய பல்லுயிர் ஆணையம் (என்.பி.ஏ) சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்ட சட்டரீதியான தன்னாட்சி அமைப்பு ஆகும். இது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ், இந்திய அரசால் 2003இல் நிறுவப்பட்டது. இந்தியா முழுவதும் 31,574 உயிரியல் மேலாண்மைக் குழுக்களுடன் (ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிற்கும்) 29 மாநிலங்களில் மாநில பல்லுயிர் வாரியங்கள் (எஸ்.பி.பி) உருவாக்கப்பட்டுள்ளன.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 2 இன் (30) பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு வெளிநாட்டவர், குடியுரிமை பெறாத இந்தியர், அல்லது ஒரு வெளிநாட்டு நிறுவனம் அல்லது தொழிற் குழுமம் உயிரியல் வளங்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய ஆராய்ச்சியினையோ அல்லது வணிகப்பயன் பாட்டிற்கோ தேசிய பல்லுயிர் ஆணைய முன் அனுமதி பெற வேண்டும்.[5] இந்தியக் குடிமக்கள் அல்லது நிறுவனங்கள் இதுதொடர்பான அனுமதியினை மாநில பல்லுயிர் வாரியத்திடம் பெற வேண்டும். [6]
இந்தியாவிலிருந்து உயிரியல் வளங்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியின் முடிவினை தேசிய பல்லுயிர் ஆணைய அனுமதியின்றி இந்தியக் குடிமகன் அல்லாத ஒருவருக்கு அல்லது வெளிநாட்டு நிறுவனத்திற்கு மாற்ற முடியாது. எனினும் ஆய்விதழ் அல்லது கருத்தரங்கில் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுவதற்கு அனுமதி தேவையில்லை. [7]
தேசிய பல்லுயிர் ஆணையத்தின் அனுமதியின்றி உயிரியல் வளங்களிலிருந்து பெறப்படும் ஆராய்ச்சியின் அடிப்படையில் எந்தவொரு நபரும் காப்புரிமை அல்லது பிற அறிவுசார் சொத்து பாதுகாப்புக்கு விண்ணப்பிக்கக்கூடாது. அத்தகைய அனுமதியை வழங்கும்போது தேசிய பல்லுயிர் ஆணையம், அத்தகைய பாதுகாப்பைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் நன்மை பகிர்விற்கான உத்தரவு இடலாம்.[8]
உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதிலிருந்து நன்மைகளைப் பகிர்வது பின்வரும் முறையில் செய்யப்படலாம்:
ஒரு நபர், ஒழுங்குமுறை விதிகளை மீறினால், "ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய காலத்திற்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுவார்கள், அல்லது பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் பாதிப்பு பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அபராதம் விதிக்கப்படலாம்" [8]
இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றமும் பிணையில் வெளிவராத மற்றும் அறியக்கூடியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.