ராபின் மெக்கிலாசன்
From Wikipedia, the free encyclopedia
அலத்தார் உரொபின் மெக்கிலாசன் (Alastair Robin McGlashan, அலஸ்டர் ரொபின் மெக்கிலாசன், இறப்பு: சூன் 19, 2012[2]) ஆங்கிலேயத் தமிழறிஞரும், கிரேக்க செவ்வியல் அறிஞரும், ஆங்கிலிக்கக் கிறித்தவ மதகுருவும் ஆவார். இவர் சேக்கிழாரின் பெரியபுராணத்தை, அதில் அடங்கியுள்ள 4281 பாடல்களையும் எளிய ஆங்கில உரைநடையில் மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்[3].
அலத்தார் உரொபின் மெக்கிலாசன் Alastair Robin McGlashan | |
---|---|
அலத்தார் மெக்கிலாசன் (தொலைக்காட்சி நேர்காணல், 2008)[1] | |
பிறப்பு | இங்கிலாந்து |
இறப்பு | சூன் 19, 2012 சட்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
கல்வி | ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பெரியபுராணத்தை ஆங்கிலத்தில் உரைநடையாக எழுதியவர் |
சமயம் | ஆங்கிலிகக் கிறித்தவம் |
மெக்கிலாசன் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செவ்வியலும், கேம்பிறிட்ஜில் இறையியலும் படித்தார். பின்னர் தென்னிந்தியாவில் 10 ஆண்டுகள் இறையியலில் குருத்துவப் பணியாற்றினார். இங்கு அவர் தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் இங்கிலாந்து திரும்பி மனநோய் மருத்துவமனை ஒன்றில் மதகுருவாகவும் யுங்கியன் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.
தனது சேவைகளில் இருந்து இளைப்பாறிய பின்னர் மெக்கிலாசன் பிரித்தானியா, உருசியா, போலந்து, மற்றும் தென்னிந்தியாவில் வசியத் துயில் முறை மருத்துவக் கல்வித் திட்டத்தில் இணைந்து சேவையாற்றினார். இவரது மூதாதையருள் ஒருவர் வடமொழிகளுக்கான ஒப்பீட்டு இலக்கண நூலொன்றை பிரித்தானிய இந்தியா காலத்தில் பதிப்புத்துள்ளார்[1].