மாப்பிளா பாடல்கள்
முஸ்லீம் நாட்டுப்புற பாடல் வகை / From Wikipedia, the free encyclopedia
மாப்பிளா பாடல்கள் (Mappila songs) என்பது (அல்லது மாப்பிளா பாட்டு) என்பது ஒரு முஸ்லீம் நாட்டுப்புற பாடல் வகையாகும் இது ஒரு மெல்லிசைக் கட்டமைப்பிற்குள் (இசால்), அரபு மொழியுடன் கூடிய மலையாளத்தின் பேச்சுவழக்கு மொழியில், கேரளாவில் உள்ள மலபார் நிலப்பகுதியின் மாப்பிளமார்களிடையே பாடப்பட்டு வருகிறது. [1] மாப்பிளா பாடல்கள் ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் கேரளாவின் கலாச்சார நடைமுறைகளுடன் நெருக்கமாகவும் இணைந்திருக்கிறது.
இப்பாடல்களில் பெரும்பாலும் அரபு மற்றும் மலையாளத்தைத் தவிர பாரசீகம், இந்துசுத்தானி மற்றும் தமிழ் மொழிகளில் இருந்து சொற்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இலக்கண தொடரியல் எப்போதும் மலையாளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. [2] [3] இவர்கள் மதம், காதல், நையாண்டி மற்றும் வீரம் போன்ற கருப்பொருள்களைக் கையாளுகிறார்கள். பெரும்பாலும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு போன்றச் சந்தர்ப்பங்களில் பாடப்படுகிறது. மாப்பிளா பாட்டு இன்று மலையாள இலக்கியத்தின் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. சிலர் மலையாள இலக்கியத்தின் மிகவும் பிரபலமான கிளையாக கருதுகிறார்கள். இது கேரளாவில் உள்ள அனைத்து மலையாள சமூகங்களும் கர்நாடகாவின் பேரி பேசும் சமூகங்களும் அனுபவிக்கிறது. [4] [5] [6] [7]