மாசாந்தரான் மாகாணம்
ஈரானின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
மாசாந்தரான் மாகாணம் (Mazandaran Province, (ஒலிப்புⓘ, பாரசீக மொழி: استان مازندران, Ostān-e Māzandarān), என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்று ஆகும். இது காசுப்பியன் கடலின் தெற்கு கடற்கரையிலும், அருகிலுள்ள மத்திய அல்போர்ஸ் மலைத்தொடரிலும், மத்திய-வடக்கு ஈரானில் அமைந்துள்ளது.
மாசாந்தரான் மாகாணம் ஈரானின் மிகவும் மக்கள் அடர்த்தி கொண்ட மாகாணங்களில் ஒன்றாகும். மேலும் இது பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை பெருமளவில் கொண்டுள்ளது.[1] மாகாணத்தின் நான்கு பெரிய மாவட்டங்கள் சாரி, அமோல், நூர் மற்றும் டோனெகாபோன் ஆகியவை ஆகும்.[2] இந்த மாகாணம் 1937 இல் நிறுவப்பட்டது.[3]
இந்த மாகாணமானது சமவெளிகள், புல்வெளிகள், காடுகள் மற்றும் மழைக்காடுகள் காஸ்பியன் கடலின் மணல் கடற்கரைகள், கரடுமுரடான மற்றும் பனி மூடிய அல்போர்ஸ் சியராவின் நீண்ட மலைத் தொடர்களில்,[4] ஆசியாவின் மிக உயர்ந்த சிகரங்கள் மற்றும் எரிமலைகளில் ஒன்றான டமாவண்ட் மவுண்ட் உட்பட பல்வேறுபட்ட நிலப் பகுதிகளைக் கொண்டது.[5]
மாசாந்தரான் மாகாணமானது மீன் வளர்ப்புத் தொழிலில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.[6] மற்றும் இந்த மீன்வளர்ப்பு பண்ணைத் தொழிலில் இந்த மாகாணம் பாரம்பரியமாக கொண்டுள்ள ஆதிக்கமானது இப்பகுதிக்கு கூடுதலான பொருளாதார முக்கியத்துவத்தை வழங்குகிறது. மேலும் மாகாணப் பொருளாதாரத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக சுற்றுலாத்துறை உள்ளது, ஏனெனில் ஈரான் முழுவதிலுமுள்ள மக்கள் இப்பகுதிக்கு வருகை தருகிறார்கள். மாசாந்தரான் மாகாணமானது உயிரி தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் மையமாக உள்ளது.[1]