![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Flag_of_the_Communist_Party_of_Malaya.svg/langta-640px-Flag_of_the_Communist_Party_of_Malaya.svg.png&w=640&q=50)
மலாயா பொதுவுடைமை கட்சி
மலாயா பொதுவுடைமை கட்சி என்பது மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட கட்சி. 1930-ஆம் ஆண்டில் ந / From Wikipedia, the free encyclopedia
மலாயா பொதுவுடைமை கட்சி அல்லது மலாயா கம்யூனிஸ்டு கட்சி (மலாய்: Parti Komunis Malaya; ஆங்கிலம்: Communist Party of Malaya; சீனம்: 马来亚共产党) என்பது மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட கட்சி. 1930-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கட்சி மார்க்சிசம்; லெனினிசம்; மாவோயிசம் கொள்கைகளை முன்னெடுத்த கட்சி. அதே வேளையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த அரசியல் கட்சியும் ஆகும்.
மலாயா பொதுவுடைமை கட்சி Malaya Communist Party | |
சுருக்கக்குறி |
|
---|---|
குறிக்கோளுரை | உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடுங்கள் |
தொடக்கம் | ஏப்ரல் 1930 |
கலைப்பு | 2 டிசம்பர் 1989 |
செய்தி ஏடு | மின் செங் பாவ் (Min Sheng Pau) |
துணை இராணுவப் பிரிவு |
|
உறுப்பினர் (1939) | 40,000 |
கொள்கை | கம்யூனிசம் மார்க்சிசம் லெனினிசம் மாவோயிசம் |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி கருத்தியல் |
நிறங்கள் | சிகப்பு |
கட்சிக்கொடி | |
![]() |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ac/Japanese_Advancement%2C_Labis_%28cropped_II%29_%28AWM_4093032%29.jpg/320px-Japanese_Advancement%2C_Labis_%28cropped_II%29_%28AWM_4093032%29.jpg)
இந்தக் கட்சி மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்; மலாயா தேசிய விடுதலை இராணுவம் ஆகிய இரண்டு இராணுவங்கள் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்கள் மலாயாவை ஆக்கிரமிப்பதற்கு எதிராக இந்தக் கட்சி எதிர்ப்பு முயற்சிகளை மேற்கொண்டது.
பின்னர் மலாயா அவசரகாலத்தின் போது பிரித்தானிய பேரரசிற்கு எதிராக தேசிய விடுதலைப் போரை நடத்தியது. 1957-ஆம் ஆண்டில் மலாயா கூட்டமைப்பில் இருந்து பிரிட்த்தானியக் காலனித்துவம் வெளியேறியது. அதற்கு முன்னர் மலாயாவில் ஒரு சோசலிச அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.[2]
மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக இந்தக் கட்சி பற்பல கொரில்லா பிரசாரங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டது. 1989-ஆம் ஆண்டில் இந்தக் கட்சி கலைக்கப்பட்டது. அதற்கு முன்னர் கட்சியில் இருந்த அனைவரும் சரண் அடைந்தார்கள்.