![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ea/Mongol_Empire_map.gif/640px-Mongol_Empire_map.gif&w=640&q=50)
மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும்
மங்கோலியப் பேரரசு உருவாக காரணமான தொடர்ச்சியான படையெடுப்புகள் மற்றும் வெற்றிகள் / From Wikipedia, the free encyclopedia
மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும் (Mongol invasions and conquests), 13ஆம் நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்தது. 1300ஆம் ஆண்டின் முடிவில் ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மங்கோலியப் பேரரசின் காலடியில் வீழ்ந்தது. மங்கோலியர்கள் போரில் கைப்பற்றிய நாடுகளை ஆள வேண்டும் என்ற எண்ணமின்றி, போரின் போது கையில் சிக்கிய எதிர் நாட்டின் படை வீரர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது வாளாள் தலைகளை வெட்டி வீழ்த்தி, விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து, பின் நாடு நகரத்தை சூறையாடி விட்டுச் செல்வதையே நோக்கமாக கொண்டிருந்தனர். ஒரு மங்கோலிய வீரன், ஒரு நாளிற்கு குறைந்தது 24 மக்களை வாளால் கொல்ல வேண்டும் என கட்டளையிடப்பட்டிருந்தனர்.[1] செங்கிஸ் கான், ஒகோடி கான் மற்றும் குப்லாய் கான் போன்ற பேரரசர்கள் காலத்தில் மங்கோலியத் தொடர் படையெடுப்புகளால், வரலாற்றில் அதிக மனித உயிர்கள், மனிதாபமற்ற முறைகளில் பலி கொள்ளப்பட்டது என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். பல நாடுகளில் மக்கள் அகதிகளாக அலைந்தனர். மங்கோலியர்கள் வந்து சென்ற நாடு, நகரங்கள் எல்லாம் பாழடைந்து போயிற்று. மக்கள் வறுமையில் வாடினர். பலர் புலம் பெயர்ந்தனர்.[2][3][4][5][6][7][8]
மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும் | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() மங்கோலியப் பேரரசின் விரிவாக்கம் 1206–1294 |
|||||||
|
1227 இல் செங்கிஸ் கான் மரணித்த பின்னர் அவரது வாரிசுகள் யுவான் அரசமரபு, கானேட் அரசமரபு, சாகததே கானேட் அரசமரபு மற்றும் தங்க ஹோர்டே அரசமரபுகள் என மங்கோலியப் பேரரசை பிரித்துக் கொண்டு ஆண்டனர்.
கி பி 1240 ஆண்டிற்குள் நடு ஆசியா, மேற்காசியா, முழுவதையும் தொடர் படையெடுப்புகளால் வெற்றி கொள்ளப்பட்டு, கிழக்கு ஐரோப்பாவை மங்கோலிப் படைகள் அடைந்தன.
தார்தாரி இன மக்களும், மங்கோலியர்களும் கூட்டு சேர்ந்து ரசியா மீது படையெடுத்தனர்.
மங்கோலியர்களின் தொடர் ஆக்கிரமிப்புகளால் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதால், பல பகுதிகளில் மக்கட்தொகை குறைந்து விட்ட்து. குறிப்பாக வடக்கு சீனாவில் 50 மில்லியனாக இருந்த மக்கள் தொகை 9 மில்லியனாக குறைந்து விட்டது. பாரசீகத்தில் கிராமங்களில் வரி வருவாய் 80 விழுக்காட்டிற்கு குறைந்து விட்டது. மங்கோலியப் படையெடுப்புகளால், கிழக்காசியாவில் இசுலாமிய சமூகம் படுமோசமாக பாதிப்படைந்தது. மேற்கு ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளில் இருந்த இசுலாமிய ஆட்சிகள் முடிவு கட்டப்பட்டது.[9]
மங்கோலிய-துருக்கிய கலப்பினத்தவரான தைமூரிய வம்சத்தின், தைமூரின் வழிவந்த மொகலாயர்கள், 1260இல் இந்தியாவில் தில்லி சுல்தானகத்திற்குப் பின் தில்லியில் மொகலாயப் பேரரசை நிறுவினர்.