தங்க நாடோடிக் கூட்டம்
உருசியாவை கி. பி. 1242-1502இல் ஆண்ட ஒரு மங்கோலியக் கானரசு / From Wikipedia, the free encyclopedia
தங்க நாடோடிக் கூட்டம் என்பது மங்கோலியாவில் தோன்றி பின் துருக்கிய மயமாக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கானரசாகும். இது கிப்சாக் கானரசு என்றும் சூச்சியின் உளூஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாடு 1255இல் படு கானின் மறைவுக்குப் பின் 1359 வரை தழைத்தோங்கியது. இதன் இராணுவமானது இசுலாமைத் தழுவிய உசுபெக் கானின் (1312–1341) காலத்தில் வலிமையுடன் விளங்கியது.
தங்க நாடோடிக் கூட்டம் சூச்சியின் உளூஸ் Зүчийн улс | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1240கள்–1502 | |||||||||||||||||||||||||||||||
கற்றலான் வரைபடத்தில் உள்ளபடி தங்க நாடோடிக் கூட்டத்தின் கொடி (மற்ற ஆதாரங்களின்படி தங்க நாடோடிக் கூட்டமானது கானின் மஞ்சள் நிற கொடிக்காக அறியப்படுகிறது.[1]) | |||||||||||||||||||||||||||||||
நிலை | நாடோடிப் பேரரசு மங்கோலியப் பேரரசின் பகுதி | ||||||||||||||||||||||||||||||
தலைநகரம் | சராய் படு | ||||||||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் |
| ||||||||||||||||||||||||||||||
சமயம் | தெங்கிரி மதம் ஷாமன் மதம் கிறித்தவம் திபெத்திய பௌத்தம் (1240கள்–1313) இசுலாம் (1313–1502) | ||||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | பகுதியளவு தேர்ந்தெடுத்த அரசு, வாரிசு வழி அரசு | ||||||||||||||||||||||||||||||
கான் | |||||||||||||||||||||||||||||||
• 1226–1280 | ஓர்டா கான் (வெள்ளை நாடோடிக் கூட்டம்) | ||||||||||||||||||||||||||||||
• 1242–1255 | படு கான் (நீல நாடோடிக் கூட்டம்) | ||||||||||||||||||||||||||||||
• 1379–1395 | தோக்தமிசு | ||||||||||||||||||||||||||||||
• 1435–1459 | குச்சுக் முகம்மது (பெரிய நாடோடிக் கூட்டம்) | ||||||||||||||||||||||||||||||
• 1481–1498, 1499–1502 | சயிக் முகம்மது (பெரிய நாடோடிக் கூட்டம்) | ||||||||||||||||||||||||||||||
சட்டமன்றம் | குறுல்த்தாய் | ||||||||||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | கடைசி நடுக்காலங்கள் | ||||||||||||||||||||||||||||||
• மங்கோலியர்களின் ருஸ் படையெடுப்புக்குப் பின் நிறுவப்பட்டது | 1240கள் | ||||||||||||||||||||||||||||||
1379 | |||||||||||||||||||||||||||||||
1466 | |||||||||||||||||||||||||||||||
• எஞ்சியவை கிரிமிய கானரசிடம் பணிதல் | 1502 | ||||||||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||||||||
1310[3][4] | 6,000,000 km2 (2,300,000 sq mi) | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | உருசியா உக்ரைன் கசக்கஸ்தான் மல்தோவா பெலருஸ் உருமேனியா உஸ்பெகிஸ்தான் துருக்மெனிஸ்தான் சியார்சியா அசர்பைஜான் பல்கேரியா சீனா போலந்து | ||||||||||||||||||||||||||||||
a இந்நாடு பொதுவாக மாபெரும் நாடோடிக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது (உளு ஓர்டா).[2] |
1255இல் படு கானின் (தங்க நாடோடி கூட்டத்தின் நிறுவனர்) இறப்பிற்குப் பிறகு அவரது அரசமரபு ஒரு முழு நூற்றாண்டுக்கு 1359 வரை தழைத்தோங்கியது. நோகை கானின் கிளர்ச்சி 1290களில் ஒரு பகுதி உள்நாட்டு யுத்தத்தை தூண்டிய போதும் அவரது அரசமரபு தழைத்தோங்கியது. நாடோடி கூட்டத்தின் ராணுவ சக்தியானது இஸ்லாமை தழுவிய உஸ்பெக் கானின் (1312–1341) ஆட்சியின்போது உச்சத்தை அடைந்தது. அதன் உச்சத்தின் போது தங்க நாடோடி கூட்டத்தின் பகுதிகளானது பெரும்பாலான கிழக்கு ஐரோப்பா (உரால் மலைகள் முதல் தன்யூப் ஆறு) வரையும் மற்றும் கிழக்கில் சைபீரியாவின் உள்பகுதி வரையிலும் நீண்டு இருந்தது. தெற்கில் தங்க நாடோடி கூட்டத்தின் நிலங்கள் கருங்கடல், காக்கேசிய மலைகள் மற்றும் ஈல்கானரசு என்று அறியப்பட்ட மங்கோலிய அரசமரபின் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு இருந்தது.[5]
1359 முதல் இந்த கானரசு வன்முறை நிறைந்த ஓர் அரசியல் குழப்பத்தை அனுபவித்தது. பின்னர் தோக்தமிசால் (1381–1395) குறுகிய காலத்திற்கு ஒன்றிணைக்கப்பட்டது. எனினும், பின்னர், தைமூரிய பேரரசின் நிறுவனரான தைமூரின் 1396ஆம் ஆண்டு படையெடுப்புக்குப் பிறகு தங்க நாடோடி கூட்டமானது சிறிய தாதர் கானரசுகளாக உடைந்தது. அதன் சக்தி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாடோடிக் கூட்டமானது சக்தியை இழக்க ஆரம்பித்தது. 1466ஆம் வருடத்தில் இது சாதாரணமாக "பெரிய நாடோடி கூட்டம்" என்று அழைக்கப்பட்டது. இதன் பகுதிகளுக்குள் துருக்கிய மொழிகளை முதன்மையாக பேசிய பல்வேறு கானரசுகள் தோன்றின. இந்த உட்குழப்பங்கள் காரணமாக 1480ஆம் ஆண்டு உக்ரா ஆற்று போரின் போது கப்பம் கட்டிய வடக்கு மாநிலமான முஸ்கோவி "தாதர் நுகத்தடியில்" இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. தங்க நாடோடி கூட்டத்தின் கடைசி எஞ்சிய பகுதிகளான கிரிமிய கானரசு மற்றும் கசக் கானரசு ஆகியவை முறையே 1783 மற்றும் 1847 வரை பிழைத்திருந்தன.