முகலாயப் பேரரசு
1526-1857 காலகட்டத்தில் பெரும்பாலான இந்திய துணைக்கண்ட பகுதிகளை ஆண்ட வாரிசு வழிப் பேரரசு / From Wikipedia, the free encyclopedia
முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, இந்திய துணைக்கண்டத்துக்கு உட்பட்ட தற்போதைய இந்தியா, ஆப்கானித்தான், பாக்கித்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கி. பி. 1526 தொடக்கம் முதல் 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்கிய-பாரசீக/ துருக்கிய-மங்கோலிய தைமூரியத் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். பாபர் தற்கால உஸ்பெகிஸ்தானில் இருந்து வந்தவர் ஆவார். அவர் சஃபாவிட் மற்றும் உதுமானிய பேரரசுகளின் உதவியையும் இப்போரில் வெல்ல பயன்படுத்திக் கொண்டார்.[11] முகல் என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள்.[12] இதன் அதிக பட்ச பரப்பளவைக் கொண்டிருந்த சமயத்தில் முகலாயப் பேரரசு தெற்காசியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக இருந்தது.[13]
முகலாயப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1526–1857 | |||||||||||||||||||||||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||||||||||||||||||||||
தலைநகரம் | |||||||||||||||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் |
| ||||||||||||||||||||||||||||||||||||
சமயம் | அரச சமயம்:
| ||||||||||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | கூட்டாட்சி அமைப்பின் கீழான ஒருமுக, முழுமையான முடியரசு
| ||||||||||||||||||||||||||||||||||||
பேரரசர்[lower-alpha 1] (பாட்ஷா) | |||||||||||||||||||||||||||||||||||||
• 1526–1530 | பாபுர் (முதல்) | ||||||||||||||||||||||||||||||||||||
• 1837–1857 | பகதூர் சா சஃபார் (கடைசி) | ||||||||||||||||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | ஆரம்ப நவீன காலம் | ||||||||||||||||||||||||||||||||||||
21 ஏப்ரல் 1526 | |||||||||||||||||||||||||||||||||||||
• சூர் பேரரசால் இடையூறுக்கு உள்ளானது | 1540–1555 | ||||||||||||||||||||||||||||||||||||
5 நவம்பர் 1556 | |||||||||||||||||||||||||||||||||||||
• முகலாய-இராசபுத்திரப் போர்கள் | 1526-1750 | ||||||||||||||||||||||||||||||||||||
1680–1707 | |||||||||||||||||||||||||||||||||||||
• வங்காள-முகலாயப் போர்களின் பரோ புயான் | 1576-1612 (ஜஹாங்கீரின் ஆளுநர் இசுலாம் கானின் கீழ் வங்காளம் இறுதியாக முகலாயப் பேரரசின் பகுதியானது) | ||||||||||||||||||||||||||||||||||||
• ஔரங்கசீப்பின் இறப்பு | 3 மார்ச் 1707 | ||||||||||||||||||||||||||||||||||||
24 பெப்ரவரி 1739 | |||||||||||||||||||||||||||||||||||||
1746–1763 | |||||||||||||||||||||||||||||||||||||
1757 | |||||||||||||||||||||||||||||||||||||
• வங்காளப் போர் | 1759–1765 | ||||||||||||||||||||||||||||||||||||
• தில்லி முற்றுகை | 8 சூன்–21 செப்டம்பர் 1857 | ||||||||||||||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||||||||||||||
1690[7][8] | 4,000,000 km2 (1,500,000 sq mi) | ||||||||||||||||||||||||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||||||||||||||||||||||||
• 1700[9] | 15,84,00,000 | ||||||||||||||||||||||||||||||||||||
நாணயம் | ரூபாய், தகா, தாம்[10]:73–74 | ||||||||||||||||||||||||||||||||||||
|
முகலாய ஏகாதிபத்திய அமைப்பானது 1600 களில் பாபரின் பேரன் அக்பர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவே அறியப்படுகிறது.[14] இந்த ஏகாதிபத்திய அமைப்பு கி. பி. 1720 வரை நீடித்தது. முகலாயப் பேரரசின் கடைசி முக்கியமான பேரரசரான அவுரங்கசீப்பின் இறப்பிற்கு பிறகு சிறிது காலம் வரை நீடித்தது.[15][16] மேலும் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில்தான் முகலாயப் பேரரசு தனது பரப்பளவில் அதிகபட்ச அளவை எட்டியது. பின்னர் படிப்படியாக சிதைய ஆரம்பித்தது. பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி பெரும்பாலான இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் பழைய தில்லியை சுற்றியிருந்த பகுதிகளில் மட்டுமே முகலாய அரசு இருந்தது. 1857ல் சிப்பாய் கலகத்திற்கு பிறகு பிரித்தானிய அரசால் முகலாயப் பேரரசானது அதிகார பூர்வமாக நீக்கப்பட்டது.
முகலாயப் பேரரசு அதன் இராணுவ நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்டு நீடித்த போதும்,[17][18][19] அது தன் ஆட்சிக்குள் வந்த கலாச்சாரங்கள் மற்றும் மக்களை கடுமையாக ஒடுக்கவில்லை. மாறாக புதிய நிர்வாக நடைமுறைகள் மூலம் அவர்கள் அனைவரையும் சமமாக்கியது.[20][21] பல்வேறுபட்ட ஆளும் வர்க்கத்தினர் காரணமாக திறமையான, மையப்படுத்தப்பட்ட மற்றும் தரப்படுத்தப்பட்ட ஆட்சி நடைபெற்றது.[22] 17-ஆம் நூற்றாண்டு முழுவதும் முகலாயப் பேரரசால் உருவாக்கப்பட்ட அமைதியானது இந்திய பொருளாதார விரிவாக்கத்தில் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.[23] பேரரசின் செல்வத்திற்கு முக்கியமான அடித்தளமாக அமைந்தது விவசாய வரிகளாகும். இது மூன்றாம் முகலாய மன்னர் அக்பரால் கொண்டு வரப்பட்டது.[24][25] முகலாய இந்தியாவானது உற்பத்தித் துறையில் உலகிலேயே முதல் இடத்தில் இருந்தது.[26] 18 ஆம் நூற்றாண்டு வரை உலக தொழில்துறை உற்பத்தியில் 25% இந்தியாவில் இருந்து தான் பெறப்பட்டது.[27] இந்திய பெருங்கடலில் வளர்ந்து வந்த ஐரோப்பிய நடமாட்டம், மற்றும் இந்திய மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கான அதிகப்படியான தேவை ஆகியவை முகலாய அவைகளில் மேலும் செல்வத்தைப் பெருக்கின.[28]
முகலாய ஆளும் வர்க்கத்தினர் பகட்டான நுகர்வோராக இருந்தனர்.[29] இதன் காரணமாக ஓவியங்கள், இலக்கிய வடிவங்கள், ஜவுளிகள் மற்றும் கட்டட கலை ஆகியவை வளர்ச்சியடைந்தன. குறிப்பாக ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில் இவற்றிற்கான ஆதரவு அதிகமாக இருந்தது.[30] ஆக்ரா கோட்டை, பத்தேப்பூர் சிக்ரி, செங்கோட்டை, ஹுமாயூனின் கல்லறை, இலாகூர் கோட்டை மற்றும் தாஜ்மஹால் ஆகியவை தெற்காசியாவில் காணப்படும் முகலாயர்களால் உருவாக்கப்பட்ட உலக பாரம்பரிய களங்கள் ஆகும். இதில் தாஜ்மஹால் "இந்தியாவில் முஸ்லிம் கலையின் ஆபரணம் என்றும், உலக பாரம்பரியத்தின் உலக அளவில் போற்றப்படுகின்ற தலை சிறந்த படைப்புகளில் ஒன்று" எனவும் கருதப்படுகிறது.[31]
பேரரசின் பெரும்பகுதி, இரண்டாவது முகலாய மன்னனான ஹுமாயூனின் காலத்தில், பஷ்தூன் ஷேர் ஷா சூரி என்பவரால் கைப்பற்றப்பட்டது.