போசு நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
போசு நிறுவனம் (Bose Institute)(பாசு பிகியன் மந்திர்) இந்தியாவின் பழமையான பொது ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.[1] இந்த நிறுவனம் 1917ஆம் ஆண்டில் இந்தியத் துணைக்கண்டத்தில் நவீன அறிவியல் ஆராய்ச்சியின் தந்தை ஆச்சார்யா சர் ஜகதீஷ் சந்திர போசால் நிறுவப்பட்டது. போசு இறக்கும் வரை முதல் இருபது ஆண்டுகள் இதன் இயக்குநராக இருந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக நோபல் பரிசு பெற்ற ச. வெ. ராமனுக்குப் பின் வந்த தேபேந்திர மோகன் போசு, அடுத்த முப்பது வருடங்களுக்கு போசு நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். உலகளாவிய போக்குகளுடன் ஒத்திசைவாக ஆசியாவிலும் இந்தியாவிலும் உள்ள இடைநிலை ஆராய்ச்சி என்ற கருத்துக்கு இந்த நிறுவனம் முன்னோடியாக இருந்தது.
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
போஸ் நிறுவன இலட்சினை | |
வகை | தன்னாட்சி ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1917; 107 ஆண்டுகளுக்கு முன்னர் (1917) |
நிறுவுனர் | ஜகதீஷ் சந்திர போஸ் |
சார்பு | அறிவியல் தொழில்நுட்பத் துறை |
பணிப்பாளர் | உதய் பந்தோபாத்யா |
அமைவிடம் | , , 22.5861°N 88.3937°E / 22.5861; 88.3937 |
வளாகம் | நகரம் |
இணையதளம் | www |
மூடு