ச. வெ. இராமன்
இந்திய இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்காக 1930ல் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
சர் சந்திரசேகர வெங்கட ராமன் | |
---|---|
பிறப்பு | (1888-11-07)7 நவம்பர் 1888 திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 21 நவம்பர் 1970(1970-11-21) (அகவை 82) பெங்களூரு, கர்நாடகம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் இந்திய அறிவியல் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஜி. என். ராமச்சந்திரன் |
அறியப்படுவது | இராமன் விளைவு |
விருதுகள் | நைட் பேச்சளர் (1929) இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930) பாரத ரத்னா (1954) லெனின் அமைதிப் பரிசு (1957) |
சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.