பெரிக்கிளீசு
பண்டைய கிரேக்க அரசியல்வாதி, பேச்சாளர் மற்றும் ஏதென்சின் தளபதி / From Wikipedia, the free encyclopedia
பெரிக்கிளீசு (Pericles, ( கிரேக்கம்: Περικλῆς; கி.மு. 495 – 429 ) என்பவர் ஏதென்சின் பொற்காலத்தின் போது இருந்த ஒரு கிரேக்க அரசியல்வாதி மற்றும் தளபதியாக ஆவார். இவர் ஏதெனியன் அரசியலில், குறிப்பாக கிரேக்க பாரசீகப் போர்கள் மற்றும் பெலோபொன்னேசியப் போருக்கு இடையே முக்கியமானவராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார், மேலும் சமகால வரலாற்றாசிரியரான துசிடிடீஸ் அவர்களால் "ஏதென்ஸின் முதல் குடிமகன்" என்று பாராட்டப்பட்டார்.[1] பெரிகல்ஸ் டெலியன் கூட்டணியை ஏதெனியப் பேரரசாக மாற்றினார். மேலும் பெலோபொன்னேசியப் போரின் முதல் இரண்டு ஆண்டுகளில் தனது நாட்டு மக்களை வழிநடத்தினார். ஏறக்குறைய கிமு 461 முதல் 429 வரை ஏதென்சை இவர் வழிநடத்திய காலகட்டம், சில நேரங்களில் "பெரிக்கிள்ஸ் காலம்" என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு குறிப்பிடப்பட்ட காலகட்டம் பாரசீகப் போர்களின் முந்தைய காலங்களையும் அல்லது அடுத்த நூற்றாண்டின் பிற்பகுதியையும் உள்ளடக்கியது.
பெரிக்கிளீசு | |
---|---|
"பெரிக்கிள்ஸ், சாந்திப்பஸின் மகன், ஏதெனியன்" என்ற கல்வெட்டைத் தாங்கிய பெரிக்கிள்சின் மார்பளவு. பளிங்கு சிலையின், உரோமானிய நகல் வாடிகன் அருங்காட்சியகங்கள், | |
பிறப்பு | கி.மு 495 ஏதென்ஸ், கிரேக்கம் |
இறப்பு | கி.மு. 429 ( 65 – 66 வயதில்) ஏதென்ஸ், கிரேக்கம் |
சார்பு | ஏதென்சு |
தரம் | ஸ்ட்ராட்டெகாய்ஸ் |
போர்கள்/யுத்தங்கள் | சிசியோன் மற்றும் அகர்னானியாவில் போர் (கி.மு. 454 ) Second Sacred War (கி.மு. 448) கலிபோலியிலிருந்து இருந்து காட்டுமிராண்டிகள் வெளியேற்றம் (கி.மு. 447) சாமியான் போர் (கி.மு. 440) பைசாந்தியம் முற்றுகை (கி.மு. 438) பெலோபொன்னேசியன் போர் (கி.மு. 431–429) |
துணை(கள்) | மிலேட்டசின் அஸ்பாசியா |
பிள்ளைகள் | Paralus and Xanthippus Pericles the Younger |
உறவினர் | சந்திபஸ் (தந்தை) அக்ரிஸ்டே (தாய்) |
பெரிக்கிளீசு கலை, இலக்கியத்தை ஊக்குவித்தார். மேலும் இவரது முயற்சிகளின் மூலம் ஏதென்ஸ் பண்டைய கிரேக்க உலகின் கல்வி மற்றும் கலாச்சார மையமாக புகழ் பெற்றது. இவர் தன் இலட்சியத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அது பார்த்தினன் உட்பட அக்ரோபோலிசில் எஞ்சியிருக்கும் பெரும்பாலான கட்டமைப்புகளை உருவாக்கியது. இவரது இந்த திட்டங்கள் நகரை அழகுபடுத்தி, பாதுகாத்தது, அதன் பெருமையை வெளிப்படுத்தியது மற்றும் அதன் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.[2] திறணாய்வாளர்கள் இவரை ஒரு ஜனரஞ்சகவாதி என்று அழைக்கும் அளவிற்கு ஏதெனியன் சனநாயகத்தை வளர்த்தார்.[3][4] பெரிக்கிள்ஸ், அவரது தாயார் வழியில், சக்திவாய்ந்த மற்றும் வரலாற்று செல்வாக்கு மிக்க அல்க்மேயோனிட் குடும்பத்தில் இருந்து வந்தவர். கிமு 429 இல் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஏதென்ஸ் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டார். இது எசுபார்த்தாவுடன் நீடித்த மோதலின் போது நகர அரசை பலவீனப்படுத்தியது.