புனே
மகாராஷ்டிராவிலுள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
புனே (Pune) (மராத்தி: पुणे) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். முன்னதாக புணாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூணா என்றறியப்படும் இவ்வூர், நாட்டின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தக்காண பீடபூமியில் கடல் மட்டத்திற்கும் மேல் 560 மீட்டர்களில் புணே அமைந்திருக்கிறது.[3] புணே நகரம் புணே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமாகும்.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
புணே (पुणे) | |||||||
தக்காணத்தின் இராணி | |||||||
— பெருநகரம் — | |||||||
அமைவிடம் | 18°31′13″N 73°51′24″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | மகாராட்டிரம் | ||||||
மாவட்டம் | புணே | ||||||
வட்டம் | ஹவேலி வட்டம் | ||||||
ஆளுநர் | ரமேஷ் பைஸ் | ||||||
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே | ||||||
மேயர் | ராஜலக்ஷ்மி போஷலே | ||||||
நகரவை ஆணையர் | |||||||
மக்களவைத் தொகுதி | புணே (पुणे) | ||||||
மக்கள் தொகை |
333,7,481[1] (8-ஆவது) (2009[update]) • 7,214/km2 (18,684/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
1109.69 கிமீ2 (428 சதுர மைல்) • 570.62 மீட்டர்கள் (1,872.1 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.punecorporation.org |
பொ.ஊ. 937-ஆம் ஆண்டிலிருந்து புணே என்ற நகரம் இருந்து வருவதாக தெரிகிறது.[4] மராட்டியப் பேரரசை நிறுவிய சிவாஜி புணேயில் ஒரு சிறுவனாக வளர்ந்தார். பின்னாளில் தனது ஆட்சிக்காலத்தில் இந்த நகரத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் மேற்பார்வையிட்டார். 1730-ஆம் ஆண்டு, சத்ரபதி சாதராவின் பிரதம அமைச்சரான பேஷ்வாவின் தலைமையில் புனே ஒரு மிகமுக்கியமான அரசியல் மையமாக விளங்கியது. 1817-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவோடு இந்தத் தலைநகரம் இணைக்கப்பட்ட பிறகு, இந்தியா விடுதலை பெறும் வரை பம்பாய் பிரசிடென்ஸியின் "பருவகால தலைநகரமாகவும்", பாசறை நகரமாகவும்(ஆங்கிலத்தில் Cantonment) செயல்பட்டது.
இன்று, நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏழு பல்கலைக்கழகங்களுடன் புணே கல்வி வசதிவாய்ப்புகள் கொண்ட நகரமாக அறியப்படுகிறது.[5] 1950-60-ஆம் ஆண்டுகளில் இருந்து உற்பத்தி, கண்ணாடி, சர்க்கரை மற்றும் உலோக வார்ப்பு ஆகிய தொழிற்துறைகள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளன. புணே மாவட்டத்தில் பல தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆட்டோமேட்டிவ் என்னும் தானியங்கி துறை சார்ந்த நிறுவனங்கள் அமைத்துள்ள தொழிற்சாலைகளோடு புணேவும் வளர்ந்துவரும் தொழிற்துறை நகரமாக உள்ளது. அத்துடன் புணே நகரம் பாரம்பரிய இசை, விளையாட்டுக்கள், இலக்கியம், அயல்நாட்டு மொழியைக் கற்பித்தல், நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் ஆய்வு போன்ற பல்வேறு கலாச்சார செயல்பாடுகளுக்காகவும் நன்கறியப்படும் நகரமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் இந்தியா முழுவதிலுமிருந்து புலம்பெயர்பவர்களையும் மாணவர்களையும் கவர்கிறது, அத்துடன் மத்திய கிழக்கு, ஈரான், கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்காசியா ஆகிவற்றிலிருந்து வரும் மாணவர்களையும் கவர்வதால் இது பல சமூகங்கள் மற்றும் பல கலாச்சாரங்கள் உள்ள நகரமாக விளங்குகிறது. இந்த நகரம் மோசமான பொதுப் போக்குவரத்து வசதியைக் கொண்டிருப்பதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த வாகனங்களையே (பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள்) பயன்படுத்துகின்றனர்.