பினாங்கு பாலம்
பினாங்கு பாலம் / From Wikipedia, the free encyclopedia
பினாங்கு பாலம் (மலாய் மொழி: Jambatan Pulau Pinang; ஆங்கிலம்: Penang Bridge; சீனம்: 槟威大桥) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு நீண்ட பாலம் ஆகும். இந்தப் பாலம் தீபகற்ப மலேசியா நிலப் பகுதியில் இருக்கும் பிறை நகரத்தையும்; மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரையும் இணைக்கிறது.[1]
விரைவான உண்மைகள் பினாங்கு பாலம்Penang Bridge Jambatan Pulau Pinang, போக்குவரத்து ...
பினாங்கு பாலம் Penang Bridge Jambatan Pulau Pinang | |
---|---|
பினாங்கு பாலம் | |
போக்குவரத்து | வாகனங்கள் |
தாண்டுவது | பினாங்கு நீரிணை; மலாக்கா நீரிணை |
பராமரிப்பு | பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் |
வடிவமைப்பாளர் | மலேசிய அரசாங்கம் ஹூண்டாய் பொறியியல் கட்டுமான நிறுவனம் |
வடிவமைப்பு | கேபிள் பாதை பாலம் |
மொத்த நீளம் | 13.5 கிமீ |
அதிகூடிய அகல்வு | 225 மீ |
கட்டியவர் | ஹூண்டாய் பொறியியல் கட்டுமான நிறுவனம் யூ. இ. ஏம் குழு |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 1982 |
கட்டுமானம் முடிந்த தேதி | 1985 |
திறப்பு நாள் | ஆகஸ்ட் 3, 1985 |
அமைவு | 5°21′14″N 100°21′09″E |
மூடு
பினாங்கு பாலம், 1985 செப்டம்பர் 14-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் போக்குவரத்திற்கு திறக்கப் பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும். இந்தப் பாலம் மலேசியாவில் இரண்டாவது நீளமான பாலமாகவும்; மொத்த நீளத்தின் அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவில் ஐந்தாவது நீளமான பாலமாகவும் உள்ளது.[2]