பவானி (இந்து தெய்வம்)
பார்வதியின் அவதாரமான இந்து பெண் தெய்வம் / From Wikipedia, the free encyclopedia
பவானி (Bhavani, மேலும் துளஜா, துரஜா, துவரிதா, அம்பா மற்றும் ஜகதாம்பா ) என்று அழைக்கப்படுபவர் இந்து சமய தெய்வமான பார்வதியின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் மகாராட்டிரத்தில் வணங்கப்படும் துர்க்கையின் ஒரு வடிவம் ஆவார். மேலும் இவர் வடக்கு குஜராத், வடக்கு கர்நாடகம், மேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபின் ராஜபுத்திரர்களால் வணங்கப்படுகிறார். பவானி என்ற பெயருக்கு "உயிரைக் கொடுப்பவர்" என்று பொருள் சொல்கின்றனர். அதாவது இயற்கையின் சக்தி அல்லது படைப்பு ஆற்றலின் ஆதாரம். இவர் தனது பக்தர்களுக்கு அருளை வழங்கும் ஒரு தாயாகக் கருதப்படுகிறார். மேலும் அசுரர்களைக் கொல்வதன் மூலம் நீதியை நிலைநாட்டுபவராக இடம் வகிக்கிறார். இறைவன் சிவன் போன்ற பவ, தேவி பார்வதி போன்ற பவானி .
மராட்டிய மன்னர் சிவாஜியின் பாதுகாப்புக்கான காவல் தெய்வமாக பவானி இருந்தார். பவானியின் மீது இவர் கொண்ட ஆழ்ந்த பக்தியில் இவர் தனது வாளான பவானி தல்வாரை இத்தெய்வத்துக்கே அர்ப்பணித்தார். பல மராத்திய நாட்டுப்புறக் கதைகள் பவானியைக் கொண்டாடுகின்றன. சிவாஜியின் தாயார் பவானியின் சிறந்த பக்தர் என்று கூறப்பட்டது. மகாராஷ்டிராவின் துல்ஜாப்பூர் நகரம் நவராத்திரியின் (செப்டம்பர் முதல் அக்டோபர் வரை) வருடாந்திர துல்ஜா பவானி கண்காட்சி நடக்கும் இடமாகும். மேலும் இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துல்ஜா பவானி கோயிலின் மூலமாகும் . இந்த கோவிலில் கருங்கல்லால் செய்யப்பட்ட தேவியின் திரு உருவச் சிலையானது, ஒரு மீட்டர் (சுமார் 3 அடி) உயரமுடன், எட்டு கைகளில் ஆயுதங்களைக் கொண்டும் மற்றும் கொல்லப்பட்ட அரக்கன் மகிசாசூரனின் தலை ஆகியவற்றைக் கொண்டாக உள்ளன.
[ மேற்கோள் தேவை ]