பரிதிமாற் கலைஞர்
From Wikipedia, the free encyclopedia
பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (சூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவர்.[1]
விரைவான உண்மைகள் வி. கோ. சூரியநாராயண சாத்திரி, பிறப்பு ...
வி. கோ. சூரியநாராயண சாத்திரி | |
---|---|
![]() | |
பிறப்பு | (1870-07-06)சூலை 6, 1870 விளாச்சேரி, மதுரை மாவட்டம், இந்தியா |
இறப்பு | நவம்பர் 2, 1903(1903-11-02) (அகவை 33) சென்னை, இந்தியா |
பணி | தமிழ்ப் பண்டிதர் |
பெற்றோர் | கோவிந்த சிவன், லட்சுமி அம்மாள் |
மூடு
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் [தொடர்பிழந்த இணைப்பு] என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.