பகுத்தறிவு
From Wikipedia, the free encyclopedia
பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளங்கும் நுண்ணறிவாகும். ஒரு பொருளை கண்ணால் பார்த்து நம்புவதை விட அதன் விளைவுகளை வைத்து நம்புவது பகுத்தறிவின் தன்மையாகும். உதாரணத்திற்கு தூரத்திலிருந்து புகையை கண்டு தீவிபத்து என அறிவது போன்றதாகும்.
ஏனைய பார்க்கும் அறிவு,கேட்கும் அறிவு ,தொடும் அறிவு,நுகரும் அறிவு,ருசிக்கும் அறிவு போன்ற அறிவுகள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான தன்மைகளாகும். ஆனால் மற்ற ஐந்தறிவுகளால் பெறப்படும் செய்திகளை ஒருங்கிணைத்து உண்மை நிலையை கண்டறிந்து ஆராய்ந்து முடிவெடுப்பது நுண்ணறிவாகும்.இதையே பகுத்தறிவு என்றும் கூறலாம்.