From Wikipedia, the free encyclopedia
தோரமணன் (Toramana) ஹெப்தலைட்டுகளின் ஒரு பிரிவினரான வெள்ளை ஹூணர்களின் பேரரசர் ஆவார். இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளை ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆண்டவர்.[1] ஹூணர்களின் படைபலத்தை ஒன்றுசேர்த்து பஞ்சாப், ஆப்கானித்தான், கந்தகார், மேற்கு இந்தியாப் பகுதிகளைக் கைப்பற்றினார். சஞ்செலி கல்வெட்டுக் குறிப்புகள் தோரமணனின் மால்வா மற்றும் குஜராத் வெற்றிகளைக் கூறுகிறது. தோரமணனின் ஆட்சிப் பகுதியில் தற்கால உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் காஷ்மீரின் பகுதிகளும் இருந்தன.[2]
தோரமணன் | |
---|---|
ஹெப்பதலைட்டுகளின் பேரரசன் | |
பின்னையவர் | மிகிரகுலன் |
குழந்தைகளின் பெயர்கள் | மிகிரகுலன் |
கி பி 510-இல் குப்தப் பேரரசர் பானுகுப்தர் தோரமணனை போரில் வென்றார்.[3][4] இவரது மகன் மிகிரகுலனும் [5] குப்தப் பேரரசர் நரசிம்ம குப்தர் மற்றும் மால்வா மன்னர் யசோதர்மனால் தோற்கடிப்பட்டார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.