துங்குசுக்கா நிகழ்வு
From Wikipedia, the free encyclopedia
துங்குசுக்கா நிகழ்வு (Tunguska event, உருசியம்: Тунгусский метеорит, துங்குஸ்கா விண்வீழ்கல்) எனும் சொற்றொடரால் குறிப்பிடப்படுவது 1908ம் ஆண்டு, கிரகோரியன் நாட்காட்டியின் படி ஜூன் 30, ஜூலியன் நாட்காட்டிப்படி ஜூன் 17 காலை உருசிய நாட்டின் மாநிலமான யெனிசெய்ஸ்க்கில் ஓடும் டுங்குஸ்க்கா நதியின் அருகாமையில் நிகழ்ந்த பாரிய வெடிப்பு நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்வினால் கிட்டத்தட்ட கிழக்கு சைபீரிய காட்டின் 2000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதி தரை மட்டமாக்கப்பட்டது.எனினும் இப்பிரதேசத்தின் சனத்தொகை அடர்த்தி குறைவு காரணமாக இதுவரை மனித உயிரிழப்புகள் எதுவும் பதியப்படவில்லை. அணுகுண்டு வெடிப்பு போல பெருவெடிப்பு நிகழ்வுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நிகழ்வு விண்கல் அல்லது விண்கல்லின் ஒருபகுதி விழுந்ததினால் ஏற்பட்டிருக்கலாமென கூறப்படுகிறது.என்றாலும் விண்பொருள் தாக்கத்தினால் உருவாக்கப்படும் பாரிய பள்ளம் எதுவும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. வேகமாக வந்த விண்கல் பூமிக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் உயரத்தில் வெடித்துச் சிதறியிருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றன
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (மார்ச் 2019) |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
துங்குசுக்கா நிகழ்வு | |
---|---|
சைபீரியாவில் அமைவிடம் | |
நிகழ்வு | காட்டுப் பகுதியில் வெடிப்பு (10–15 மெகாதொன்கள் டிஎன்டி) |
நேரம் | 30 சூன் 1908 |
இடம் | பொத்காமின்னயா துங்குசுக்கா ஆறு, சைபீரியா, உருசியப் பேரரசு |
விளைவுகள் | 2000 சதுரகிமீ காட்டுப்பகுதி அழிவு |
சேதம் | உள்ளூர் தாவரங்கள், மிருகங்கள் அழிவு சில கட்டடங்கள் சேதம் |
இறப்புகள் | 0 அதிகாரபூர்வம், 2 (இருக்கலாம்) |
காரணம் | சிறிய சிறுகோள் அல்லது வால்வெள்ளி வானில் சிதறியிருக்கலாம். |
ஆள்கூறுகள் | 60°55′N 101°57′E |
துங்குசுக்கா நிகழ்வு பூமியில் நிகழ்ந்த விண்பொருள் தாக்க வெடிப்பு நிகழ்வுகளில் மிகப் பெரியது ஆகும். ஆராய்ச்சிகள் எரிகல்லின் பரப்பளவை 60 முதல் 190 மீட்டர் வரை பல்வேறு அளவுகளில் வரையறுக்கின்றன.
1908 முதல் இதுவரை இந்நிகழ்வைப்பற்றி ஏறத்தாள 1000 அறிவியல் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் அதிகமான கட்டுரைகள் உருசிய மொழியில் வெளிவந்தவை ஆகும். 2013ல் ஆராய்ச்சி குழு ஒன்று வெடிப்பு நிகழ்ந்த இடத்தின் மையப் பகுதியில் உள்ள முற்றா நிலக்கரி சதுப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அக்கட்டுரை, வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட அம்மாதிரிகள் எரிவெள்ளி ஒன்றின் துகள்களாக இருக்கலாம் என குறிப்பிடுகிறது.[1][2]
ஆரம்பத்தில் இவ்வெடிப்பின் மூலம் வெளிப்பட்ட சக்தியின் அளவு 10-15 மெகாதொன் டி,என்,டி முதல் 30 மெகாதொன் டி.என்.டி என அணு ஆயுத விளைவு அளவு விதிப்படி வெடிச்சுவாலையின் உயரத்தை வைத்து கணக்கிடப்பட்டது.என்றாலும் பிற்காலத்தில் அதிநவீன கணணிகளைக் கொண்டு ஆராய்ந்ததன் மூலம் வெளிப்பட்ட சக்தி 3-5 மெகாதொன் டி,என்,டி என கண்டறியப்பட்டது.
ஆரம்பத்தில் கணக்கிடப்பட்ட 15 மெகாதொன் டி,என்,டி என்பது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டை விட 1000 மடங்கு ஆற்றல் பெரியதும்,1954 மார்ச் 1ம் திகதி ஐக்கிய அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட காசல் ப்ராவோ எனும் அணுகுண்டு சோதனையில் வெளிப்பட்ட ஆற்றலுக்கு (15.2 மெ.தொ) சமனானதும்,சோவியத் யூனியனினால் 30 அக்டோபர் 1961 அன்று வெடிக்கவைக்கப்பட்ட சார் அணுகுண்டின் ஆற்றலில் (50 மெகாதொன்.இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுகுண்டுகளில் மிக சக்தி வாய்ந்தது) மூன்றில் ஒரு பங்கும் ஆகும்.
இவ்வெடிப்பு 2150 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியிலிருந்த ஏறத்தாள 80 மில்லியன் மரங்களை நிர்மூலமாக்கியதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வு ரிச்டர் அளவுகோலில் 5.0 அலகாக இருக்கலாமென கருதப்படுகிறது.இந்த அளவுடைய வெடிப்பு ஒரு பெரிய நகரத்தையே அழிக்கக்கூடியது , எனினும் மக்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு பல கிலோமீட்டர் தொலைவில் வெடித்தமையால் மனித உயிர் சேதங்கள் எதுவும் பதியப்படவில்லை .சில அறிக்கைகள் இருவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டாலும் உத்தியோக பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.[3] இந்நிகழ்வு விண்கல் தாக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அடித்தளம் இட்டது.