![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/Thirumangai_Alvar.jpg/640px-Thirumangai_Alvar.jpg&w=640&q=50)
திருமங்கையாழ்வார்
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் மற்றும் இறுதி அழ்வார் / From Wikipedia, the free encyclopedia
திருமங்கையாழ்வார் (Thirumangai Alvar) என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் பிறந்தார்.[1][2] இவரது இயற்பெயர் கலியன் ஆகும். ஆதியில் இவர் சோழமன்னனுக்குப் படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவரைச் சோழதேசத்தின் 'திருமங்கை' நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் திருமங்கை ஆழ்வார், பிறப்பு ...
திருமங்கை ஆழ்வார் | |
---|---|
![]() | |
பிறப்பு | திருக்குறையலூர், சீர்காழி தமிழ்நாடு |
இயற்பெயர் | கலியன் |
குரு | சேனை முதலியார், நறையூர் நம்பி, திருக்கண்ணபுரம் சவுரிப் பெருமாள் |
இலக்கிய பணிகள் | பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் திருஎழுகூற்றிருக்கை சிறிய திருமடல் பெரிய திருமடல் |
மூடு