தமிழ்நாடு சட்டப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவை | |
---|---|
16-வது தமிழ்நாடு சட்டமன்றம் | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தலைமை | |
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 234 |
அரசியல் குழுக்கள் | அரசு (158)
எதிர்க்கட்சி (62)
மற்றவை (13) வெற்றிடம் (1)
|
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 6 ஏப்ரல் 2021 |
அடுத்த தேர்தல் | 2026 |
கூடும் இடம் | |
13.081539°N 80.285718°E / 13.081539; 80.285718 புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை, தமிழ்நாடு | |
வலைத்தளம் | |
www |
இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.[1] தொடக்கத்தில் இது கீழவை மற்றும் மேலவை என்று ஈரவைகளாக செயல்பட்டது. 1986இல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரனால் சட்ட மேலவை கலைக்கப்பட்டது. எனவே தற்போது ஒரவை கொண்ட சட்டமன்றமாக செயல்படுகின்றது.
2021 சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். தற்போது உள்ளது 16வது சட்டப் பேரவை ஆகும்.