டி. டி. வி. தினகரன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
டி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran,பிறப்பு: 13 திசம்பர், 1963) தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் ஆவார்.[5] இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த அக்காளான வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.[6][7]
டி.டி.வி.தினகரன் | |
---|---|
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்[1] | |
பதவியில் 24 டிசம்பர் 2017 – 06 மே 2021 | |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | ஜே. ஜே. எபினேசர் |
தொகுதி | ஆர்.கே.நகர் |
இந்திய மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 2004–2010 | |
தொகுதி | தமிழ்நாடு |
இந்திய மக்களவை உறுப்பினர்[2] | |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | சேடபட்டி இரா. முத்தையா |
பின்னவர் | ஜே. எம். ஆரூண்ரஷீத் |
தொகுதி | பெரியகுளம் |
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் | |
பதவியில் 20 ஜூலை 2006 – 28 ஆகத்து 2007 | |
நியமித்தவர் | ஜெ. ஜெயலலிதா |
முன்னையவர் | திண்டுக்கல் சீனிவாசன் |
பின்னவர் | ஓ. பன்னீர்செல்வம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 திசம்பர் 1963 (1963-12-13) (அகவை 60) திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (2018 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | அஇஅதிமுக (2017 வரை) சுயேச்சை (2017-2018) |
துணைவர் | அனுராதா |
உறவுகள் | வி. கே. சசிகலா |
பிள்ளைகள் | ஜெயஹரினி[3] |
பெற்றோர்s |
|
வாழிடம்(s) | அடையாறு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா[4] |
வேலை | அரசியல்வாதி |
மூலம்: |
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்.[9]
ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட வி. கே. சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.[10] பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.[11][12]
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[13] இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.[14]
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார்.[15]
21 திசம்பர், 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[16]
பின்பு மார்ச்சு 15, 2018 அன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் இக்கட்சியைத் தொடங்கினேன் என்று கூறினார்.[17]