வி. கே. சசிகலா
இந்திய பெண் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
வி. கே. சசிகலா (V. K. Sasikala, பிறப்பு: 18 ஆகத்து 1954) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.இவர் அதிமுகவின் முன்னாள் தற்காலிக பொதுச்செயலாளராக இருந்தார். முன்னாள் தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாகவும் மறைந்த எழுத்தாளரும் அரசியல்வாதியுமான ம. நடராசனின் மனைவியாகவும் இருந்தார். 2016இல் செயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் இவர் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறிது காலம் அப்பதவியில் இருந்தார்.[5][6] இவரை "புரட்சித் தாய்" எனவும் "சின்னம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார்.[7]
வி.கே.சசிகலா | |
---|---|
![]() | |
அஇஅதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் [1] | |
பதவியில் 31 திசம்பர் 2016[2] – 12 செப்டம்பர் 2017[3] | |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | எடப்பாடி க. பழனிசாமி[4] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஆகத்து 1954 (1954-08-18) (அகவை 69) திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பிற அரசியல் தொடர்புகள் | அஇஅதிமுக (2017 வரை). |
துணைவர்(கள்) | ம. நடராசன் (இறப்பு. மார்ச்சு 20, 2018) |
பிள்ளைகள் | இல்லை |
உறவினர்கள் | சசிகலா குடும்பம் |
புனைப்பெயர்(s) | புரட்சித்தாய், சின்னம்மா |
சசிகலா நடராசன் என்று தொடக்கத்தில் அறியப்பட்டவர். அரசியல் நுழைவுக்குப் பின்பு வி. கே. சசிகலா என்றும், இவரின் ஆதரவாளர்களால் சின்னம்மா என்றும் அழைக்கப்படுகிறார்.
செல்வி செயலலிதாவுடன் இணைந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தண்டனையைப் பெற்றார். பிறகு மேல்முறையீடு செய்து விடுதலையானார். ஆனால் மீண்டும் 2017 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது.[8]